துவையல் வகைகள்.
மே 8, 2009 at 9:39 முப பின்னூட்டமொன்றை இடுக
சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிடும் சிலவகைத் துவையல்களைச் சொல்லுகிறேன். புளிப்பு காரத்துடன் கூடியது.கீழ்க்கண்ட காய் வகைகளைச் சேர்த்து தயாரிக்கலாம். பீர்க்கங்காய், சௌசௌ, தக்காளிக்காய், தேங்காய், காரட், முள்ளங்கி, தனியா, இஞ்சி, புதினா, பூண்டு, கறிவேப்பிலை தக்காளிப்பழம். கத்தரிக்காய்,. அடிப்படை சாமான்களாகச் சில வகைகள். குறைந்த அளவு—-3டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு..—-மிளகாய் வற்றல் 3அல்லது 4. புளி ஒரு நெல்லிக்காயளவு ஊறவைத்துக் கொள்ளவும். சிறிது பெருங்காயம்,ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளைஎள். – 200கிராமிற்குககுறைவில்லாத நீரோட்டமுள்ள பெரிய கத்தரிக்காயை சிறிது எணணெய் யைப் பூசி மிதமான தீயில் சுடடு எடுக்கவும். மைக்ரோவேவில் கூட இரணடு ிரண்டு நிமிஷமாகத் திருப்பிச் சுட முடியும். ஆறின பிறகு தண்ணீரில் கழுவித் தோலை உறித்தெடுக்கவும். கடாயில் சிறிது எணணெயைக் காய வைத்து பருப்பு ,மிளகாய் , பெருங்காயம், எள்முதலியவைகளைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் புளி , மிளகாய், உப்பு, சுட்ட கத்தரிக்காய் வகைகளைப்போட்டு நன்றாக அரைக்கவும். பின்னர் வறுத்த பருப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு ரவை போன்ற பக்குவத்தில் கரகரப்பாக அரைத்தெடுக்க வும். ருசிக்கு வேண்டியவர்கள் சிறிது பூண்டு அல்லது வெஙகாயமும் வதக்கி அரைக்கும போது சேர்த்துக் கொள்ளலாம். அடிப்படை காய்களை சேர்க்கும் போது முள்ளங்கி, காரட்டைத தோல் ,சீவி துருவிக் கொண்டு எண்ணெயில்சற்று வதக்கிச் சேர்த்து அரைக்கவும் . இரண்டுகப் துருவல் போதுமானது.
த்க்காளிப் பழம் இரண்டுகப் வதக்கிச் சேர்க்கும் போது புளி அவசியமில்லை.அதே தக்காளிக்காயைச் சேர்க்கும்போது சிறிதளவு புளி அவசியம். இதேபோல முக்கிய பொருளாக எதைச் சேர்த்தாலும் காரத்தை வேண்டிய அளவு கூட்டியும் குறைத்தும் செய்வது நம் கையிலுள்ளது. முக்கிய சேர்வு வகைகளால் ருசியில் மாறுதல் கிடைக்கிறது. சிறிது நல் எண்ணெயில் கடுகைத் தாளிக்கவும்.
வெங்காயம் பூண்டையும் வதக்கி அதிக முக்கியப் பொருளாக வைத்துத் தயாரிக்கலாம் முக்கியப் பொருளை வைத்துப் பெயர் சொல்கிறோம். வகைகள் நம்முடைய தயாரிப்பைப் பொருத்தது.
Entry filed under: துவையல் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed