துவையல் வகைகள்—–இரண்டு
மே 11, 2009 at 2:09 பிப பின்னூட்டமொன்றை இடுக
புளி சேர்க்காமல்செய்யும் துவையல்களுக்கு கடலைப்பருப்பையும், துவம்பருப்பையும் சேர்த்துச் செய்யலாம்.சாதரணமாகப்ப்ருப்புத் துவையல் என்றே சொல்லுவோம்.
சுமாராகச் சிறிதளவு தயாரிக்க வேண்டிய சாமான்கள்.
அரைகப்-துவரம்பருப்பு,-அரைகப் கடலைப்பருப்பு,–அரைகப்தேங்காய்த்துருவல்,-அரைடீஸ்பூன்மிளகு,-சிறிதுபெருங்காயம்,-வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்,-இரண்டு காய்ந்த மிளகாய். உப்பு.
தேங்காய்,உப்பு, தவிர மற்றவைகளை எண்ணெயில் சிவக்க வறுத்துக்கொண்டுஅதையும் சேர்த்துதிட்டமாக தண்ணீர் சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.நெய்சேர்த்து சாதத்துடன் சாப்பிட ருசியாகயிருக்கும்.
இதே முறையில் முழுவதும்கடலைப்பருப்பு சேர்த்துதேங்காய் அதிகம்வைத்து பச்சைமிளகாய் சேர்த்தும் அரைக்கலாம்.
பீர்க்கங்காய்,சௌசௌ,வெங்காயம் முதலியனவும் வதக்கி சேர்த்து அரைக்கலாம்.
பொட்டுக்கடலைசேர்த்த தேங்காய் சட்டினி.
அரைக்க சாமான்கள்–தேங்காய்த்துருவல்ஒன்றரைகப்,–பொட்டுக்கடலைஅரைகப்,-பச்சைமிளகாயஐந்து,–உப்பு,
தேவைப்பட்டால் ஒருதுண்டு இஞ்சியோ வெங்காயமோ சேர்க்கலாம், எலுமிச்சைசாறுஒரு டீஸ்பூன்.
தாளிக்க–அரைடீஸ்பூன்கடுகு,-அரைடீஸ்பூன்உளுத்தம் பருப்பு,- இரண்டுஸ்பூன் நல்லெண்ணெய்,-பெருங்காயப்பொடிசிறிது.
அரைக்கக் கொடுத்திருப்பவைகளுடன் திட்டமாக உப்பு சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்த்து கெடடியாகவும் நைஸாகவும் அரைததெடுக்கவும்.தாளிதம் செய்து எ.சாறு அறிந்த கொத்தமல்லித்தழை சேர்த்து கெட்டியாகவோ அல்லது தளர்ச்சியாகவோ இட்லி,தோசை,வடை போண்டா என எல்லாவற்றிற்கும் பொருத்தமான ஜோடியாக உபயோகிக்கலாம். அடுத்து–
இரண்டுகப் தேங்காய்த்துருவலுடன் பச்சை மிளகாய் நான்கு சேர்த்து அரைத்து மேலே குறிப்பிட்டபடியே யாவையும் சேர்த்தால் தனித் தேங்காய் சட்னி தயார்.பச்சை மிளகாயை எப்போதும் எண்ணெயில் வதக்கி சேர்ப்பது நல்லது.
தேங்காய் சேர்க்காமல் வெங்காயத்தை வதக்கி பருபபுகளுடன் சேர்த்தும் அரைக்கலாம்.
மேலும்அ டுத்து பிறகு.
Entry filed under: துவையல் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed