மைசூர் போண்டா
ஜூன் 18, 2009 at 12:47 பிப 2 பின்னூட்டங்கள்
வேண்டியவை—–ஒருகப் உளுத்தம் பருப்பு.—2பச்சைமிளகாய்—-ஒரு டேபிள்ஸ்பூன்பச்சரிசி—–இவைகளை த் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிக்கட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சிறிது நீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும்.
சேர்க்க வேண்டிய சாமான்கள்—-சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய தேங்காய் மூன்று டேபிள்ஸ்பூன்,— உடைத்த மிளகு ஒரு டீஸ்பூன், —–பொடியாக நறுக்கிய கொத்த மல்லி —- பெருங்காயம் சிறிது—ருசிக்குத் தேவையான உப்பு.
பொரிக்க எண்ணெய்,————————————அரைத்த மாவுடன் சாமான்களைச் சேர்த்துக் கலந்து வாணலியில் எண்ணெயைக் காய வைத்து ஈரக்கையினால் மாவை எடுத்து ஒரே சீராக உருண்டை வடிவ த்தில் உருட்டிப்போட்டு பொன்நிறமாக பொரித்தெடுக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் போண்டாக்கள் ஒத்துப் போகும்.
மாவில் அதிகம் தண்ணீர் கூடாது. நைஸாக அரைப்பது அவசியம்.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Kamala | 1:56 பிப இல் ஒக்ரோபர் 4, 2012
super
2.
chollukireen | 3:29 பிப இல் ஒக்ரோபர் 4, 2012
கமலா ஸூப்பர் என்று எழுதியுள்ளாய். ஸந்தோஷமும் நன்றிகளும். அடிக்கடி வா. அன்புடன் சொல்லுகிறேன்.