ஆலுகோ ஆசார்
ஜூன் 29, 2009 at 6:08 பிப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவை–கால்கிலோ உருளைக் கிழங்கு.
சுமாராக நறுக்கிய குடமிளகாய்சிகப்பு ,பச்சை,தலாஒருகப்
பச்சைமிளகாய்ஆறு–இஞ்சி ஒருதுண்டு.
சிவக்க வறுத்துப் பொடித்த எள் 4டேபிள் ஸ்பூன்
மஞ்சள்பொடி ஒருடீஸ்பூன், கடுகு,சீரகம் வகைக்கு ஒருடீஸ்பூன்
வெந்தயம், அரைடீஸ்பூன் பொடியாகநறுக்கியகொத்தமல்லிஅரைகப்.
கறிவேப்பிலை சிறிது—ஐந்து,ஆறு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்.
விருப்பமுள்ளவர்கள் தாளிப்பில்.சோம்பு,–7.-8.பல்நசுக்கிய பூண்டு. பட்டை, கிராம்பும் சேர்க்கலாம்.
புளிப்பிற்கு எலுமிச்சை சாறு, அல்லது மாங்காய்த் துருவல்
வாசனைக்கு சிறிது பெருங்காயத்தூள். சுவைக்கு உப்பு.
செய்முரை——கிழஙகைக், குழையாமல் முழுதாக வேகவைத்து தோல் உரித்து திட்டமான துண்டுகளாக ஆக்கிக கொள்ளவும். வாணலியில், எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் பெருங்காயம் தாளித்து வெந்தயம் சேர்த்து சிவக்க வறுத்து நறுக்கிய இஞ்சி மிளகாய், கறிவேப்பிலை,குடமிளகாய் சேர்த்து வதக்கவும், தீயைக் குறைக்கவும், நன்றாக வதஙகியதும் மஞ்சள்பொடி உப்பு கிழங்குத் துண்டங்களைச் சேர்த்துப் பின்னும் சிறிது வதக்கி எளளுப்பொடி கொத்தமல்லி சேர்த்து நான்கு கரண்டி கொதிக்கும் நீரைவிட்டுக் கலந்து இறக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்துப் பரிமாரவும், மாங்காய்த் துருவல் வதக்கும் போது சேர்த்தால் எலுமிச்சை தேவையில்லை. பச்சைப் பட்டாணி, மெல்லியதாக நறுக்கியகாரட், முள்ளங்கி இவைகளையும் வதக்கி சேர்க்கலாம். இது ஒரு நேபாள நாட்டு வகை. அவரவர்கள், விருப்பத்திற்கு இணங்க கார மஸாலா வகைகளை கூட்டியும் குறைத்தும் தயாரிக்கலாம். சாதம், பூரி, தோசை, ரொட்டி வகைகளுடன் ருசியாகக் கொடுக்கலாம்.சற்று தளர்வாக இருப்பதற்கே தண்ணீர் சேர்க்கிரோம்.
Entry filed under: கறி வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed