எள் சாதம் அல்லது எள்ளோரை.
ஜூலை 24, 2009 at 2:52 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஒரு கப் அரிசியை உதிர் உதிரான சாதமாக தயாரித்து ஆறவிடவும்.
வேண்டிய சாமான்——-வெள்ளை எள் நானகு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு நான்கு டேபில்ஸ்பூன்
மிளகாய் வற்றல் மூன்று . — கடுகு ஒரு டீஸ்பூன்
இரண்டு டேபிள்,ஸ்பூன் துருவிய தேங்காய் ,
கால்டீஸ்பூன் பெருங்காயப்பொடி,முந்திரிப் பருப்பு7—-8 எண்ணெய்,நெய் தலாஒரு டேபிள் ஸ்பூன் சிறிது கறிவேப்பிலை ருசிக்கு உப்பு.
செய்முறை———- வாணலியை நன்றாக சூடாக்கி எள்ளை நன்றாக படபடவெனறு பொரியும்படி சிவப்பாக வறுத்தெடுக்கவும். இதேமாதிரி உளுத்தம் பருப்பையும் சிவப்பாக எண்ணெய் விடாமல் வறுத்தெடுக்கவும். தேங்காயையும் சற்று சிவக்க வறுக்கவும்.யாவும் தனித்தனியே எண்ணெய் விடாது. ஞாபகமிருக்கட்டும்.
மிளகாயைத் துளி எண்ணெயில் வறுககவும். மிக்ஸியில் பருப்பு ,மிளகாயைப் போட்டு சற்று பொடித்துக் கொண்டு எள்ளைப் போட்டு பொடிக்கவும். வறுத்த தேங்காயும் சேர்த்து கரகர எனற பதத்திலேயே பொடித்தெடுக்கவும். உப்பு, பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
திரும்ப வாணலியில் எண்ணெய் நெய்க்கலவையைக் காய்ச்சி கடுகுதாளித்து கறிவேப்பிலலையையும் பொரித்து, சாதத்தில பொடியையும் கலந்து பரவலாகக் கலக்கவும். வறுத்த முந்திரிப் பருப்பால் அலங்கரித்துப் பரிமாறவும். வேண்டுமானால் கால் டீஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.
உப்பு காரம் அவரவர்கள் விருப்பப்படி. எள் சாதமும் தயார் நிலையில்.
Entry filed under: சித்ரான்னங்கள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed