தேங்காய்ச் சாதம்.
ஜூலை 24, 2009 at 1:25 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஒரு கப் அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்து ஆற விடவும்.
ஒரு மூடி தேங்காயை அடி சுரண்டாமல் வெண்மையாக பூப்போல துருவி வைத்துக் கொள்ளவும்.
தாளிக்க சாமான்கள்.—-கடுகுஅரைடீஸ்பூன்,—- உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்——உடைத்த முந்திரிப் பருப்பு 7அல்லது8,- பெருங்காயப்பொடிசிறிது,——நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு,–
10அல்லது15 கறிவேப்பிலை இலைகள், ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,—ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்.
உப்பு வேண்டிய அளவு,——– எண்ணெயில் பொரித்த உளுந்து அப்பளாம் ஒன்று,.
செய்முறை—————– நெய எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து பருப்புகளையும் பொன்நிறமாக வறுத்து, பச்சைமிளகாய் சேர்த்து கறிவேப்பிலை தேங்காய்த்துருவல் போட்டு
நிதானமான தீயில், பெருஙகாயப் பொடியும் சேர்த்து புரட்டவும்.சற்று ஈரப்பசை குறைந்ததும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக சற்று சிவக்கும் வரை கிளறி இறக்கவும். ஆறியபின் சாதத்தில் சீராகக் கலந்து அப்பளாத்தை ப் பொடியாக உடைத்துக் கலந்து தயார் செய்யவும். தேங்காய்ச் சாதம் தயார்.
Entry filed under: சித்ரான்னங்கள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed