சம்பா சாதம்
ஓகஸ்ட் 4, 2009 at 9:00 பிப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவை——ஒருகப அரிசி
மிளகு—–இரண்டு டீஸ்பூன். சீரகம்—–இரண்டு டீஸ்பூன்
நெய்—-இரண்டு டேபிள் ஸ்பூன் ருசிக்கு உப்பு
சிறிது பெருங்காயப் பொடி சில கறிவேப்பிலை இலைகள்.
செய்முறை———-அரிசியைச் சுடச்சுட சாதமாகச் செயது கொள்ளவும். மிளகு, சீரகத்தை உப்புடன் சேர்த்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். நெய்யைக் காய்ச்சி மிளகுக் கலவையையும் பெருஙகாயத்தையும் சேர்த்து கறிவேப்பிலையுடன் பொரித்து சாதத்தில் கலந்து ஸ்பூனால் கலக்கவும். சம்பா சாதம் தயார். அவசரத் தேவைகளுக்கு சுடச்சுட சாப்பிட ருசியாக இருக்கும். சீக்கிரம் தயாரிக்க முடியும்.
Entry filed under: சித்ரான்னங்கள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed