கோவில் வடை.——–kovil vadai
ஓகஸ்ட் 14, 2009 at 1:49 பிப பின்னூட்டமொன்றை இடுக
தேன் குழலுக்கு அரைத்த மாவிலேயே இதையும் செய்யலாம். எங்களூர் வளவனூரில் ஆஞ்சநேயருக்கு இம்மாதிரி வடைகளாலேயே மாலை சாற்றுவது வழக்கம்.
வேண்டியவைகள்———-குறிப்பிட்ட மாவு–இரண்டு கப்.
வெண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்—-ருசிககு உப்பு
மிளகுநானகுடீஸ்பூன்[பொடித்தது]-பெருங்காயப்பொடி சிறிது
வடையைப் பொரித்தெடுக்க எண்ணெய்.
செய் முறை—————உப்பு, பெருங்காயத்தை சிறிது நீரில் கரைத்துக் கொள்ளவும். மாவில் மிளகுப்பொடி வெண்ணெய்சேர்த்து உப்பையும் சேர்த்து ,கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாகவும், நன்றாகவும்,பிசைந்து கொள்ளவும். இரண்டுஸ்பூன் காய்ச்சிய எண்ணெயும்,விட்டுப் பிசையவும்.
மாவைச் சிறிய எலுமிச்சைசைசில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கெட்டியான பாலிதீன் பேப்பர் மேல் ஒரு உருண்டையை, கையில் எண்ணெயைத் தொட்டுத் தடவி வைத்து வட்டமாகவும், மெல்லியதாகவும் தட்டவும். நடுவில் மோதிர விரலால் பெரிய பொட்டு அளவிற்கு பொத்தல்போட மாவை ஒதுக்கவும் எண்ணெயைத் தொட்டு தொட்டுச செய்தால் கையில் ஒட்டாது. வாழை இலைத் துண்டில் எண்ணெய் தடவியும் தயாரிக்கலாம். வடைகள் தயரித்துக் கொண்டு காயும் எண்ணெயில் நானகு, ஐந்தாகப் போட்டு வேக வைத்துத் திருப்பி ப் பொனநிரமாக, கரகரப்பாக ஆனவுடன் எடுக்கவும். எத்தனை நாட்கள் இருந்தாலும் கெடாது.
கோவில் பிரசாதமாக நிநைப்பதால்
இது கோவில் வடை.
மாவைத் தட்டும் போது உள்ளங் கையின் கட்டை விரலின் கீழ் உள்ள மேட்டு பாகத்தினால் தட்டினால் வடை சமனாகத் தட்ட வரும். சற்று தடியான அப்பளாம் அளவு பருமன் போதுமானது. பொத்தலும் அவசியம்.
Entry filed under: அரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed