வற்றல் குழம்பு—-vatral kuzhambu.
செப்ரெம்பர் 10, 2009 at 1:53 முப 3 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்
புளி–ஒருஎலுமிச்சை அளவு
சாம்பார் பொடி–ஒரு டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு கடுகு அரை டீஸ்பூன்
வெந்தயம்–ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு–ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை—இரண்டு டீஸ்பூன்
பெருங்காயப்பொடி-அரைடீஸ்பூன்
நல்லெண்ணெய்–மூன்று டேபிள் ஸ்பூன்
தேவைக்கு உப்பு
காய்ந்த மிளகாய் ஒன்று.
சாம்பார் வெங்காயம்-உறித்து நறுக்கியது ஒரு கப்
முருங்கைக்காய்–நறுக்கிய துண்டுகள் ஏழு அல்லது எட்டு
கறிவேப்பிலை இலைகள்–சிறிதளவு
செய்முறை–
புளியை ஒருகப் சுடு தண்ணீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்துச் சாரெடுக்கவும்.
மேலும் இரு முறை தண்ணீர் விட்டு கரைத்து சாரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும் .
குழம்பு செய்யும் பாத்திரத்திலோ அல்லது நான்ஸ்டிக் வாணலியிலோ எண்ணெயைக் காயவைத்து முதலில் கடுகை வெடிக்க விட்டு வெந்தயம்,பருப்புவகைகள், மிளகாயைப் போட்டு பொன்நிறமாக வறுத்துக் கொண்டு வெங்காயம்,கரிவேப்பிலை சேர்த்து தீயை மிதமாக்கி நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சாம்பார்ப் பொடி சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கி கரைத்த புளித்தண்ணீரைச் சேர்க்கவும். முருங்கைத் துண்டுகள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். குழம்பு சுண்டி பாதியாகக் குறைந்தவுடன் அரைஸ்பூன் அரிசி மாவை இரண்டுஸ்பூன் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வைத்து உபயோகிக்கவும்.
ஒரு துளி வெல்லம் சேர்ப்பவர்களும் உண்டு.
Entry filed under: குழம்பு வகைகள்.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Hema | 4:39 முப இல் பிப்ரவரி 28, 2015
சாம்பார் பொடி செய்யும் விதம்
2.
chollukireen | 7:26 முப இல் பிப்ரவரி 28, 2015
வேண்டுமா?
3.
chollukireen | 8:05 முப இல் பிப்ரவரி 28, 2015
வேர்ட்ப்ரஸ். காமில் சொல்லுகிறேன் பொடிவகைகளில் பார்த்தால் சாம்பார்பொடி அளவுகள் எழுதியிருக்கிறேன். அன்புடன்.