அரிசி மாவு புட்டு-rice puttu
ஒக்ரோபர் 13, 2009 at 4:24 பிப பின்னூட்டமொன்றை இடுக
புட்டு செய்வதற்கு அரிசியை ஊறவைத்து களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த மாவில்தான் செய்ய வேண்டும். அதிக அளவு மாவு செய்து வறுத்து வைத்துக் கொண்டால் பட்சணங்கள் செய்ய சவுகரியமாக இருக்கும். சாதாரணமாக பட்சணங்களுக்கு வெறும் வாணலியில் அரைத்த மாவைக் கோலம்போட இழை வரும் அளவிற்கு வறுத்தால் போதும்.
புட்டு செய்ய மாவைச் சற்று சிவக்க வறுக்க வேண்டும்.
வேண்டிய சாமான்கள்—-ஒரு கப் வறுத்து பின் சலித்த அரிசி மாவு . ஒருகப-,வெல்லத்தூள்,——-ஒரு துளி உப்பு, கால்டீஸ்பூன்மஞ்சள்பொடி.
ஏலக்காய் 6,—முந்திரிப் பருப்பு 8,—–நெய் 2டேபிள் ஸ்பூன்.
தேங்காய்த் துருவல் 3டேபிள் ஸ்பூன்
செய்முறை—–மாவுடன் உப்பு, மஞ்சள்பொடி கலக்கவும். சூடான தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசிரவும் மாவு உதிர் உதிராகவே இருக்க வேண்டும். மாவைச் சேர்த்துக் கையில் பிடித்தால் பிடிக்கவும் விட்டால் உதிரும்படியாகவும் இருக்கும் பதத்தில் இருக்க, ஜலத்தை(4அல்லது5 டீஸ்பூன்) கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசிறவும்.
பிசிறிய மாவை சற்று பெரிய கண் உள்ள சல்லடையில் சலித்து கட்டிகளை நீக்கி சரியாக உதிர்த்து அரைமணி நேரம் ஊற விடவும்.
பிழிந்தெடுத்த ஒரு ஈரத் துணியில் பரவலாக மாவைக்கொட்டி , கட்டிவைத்து, இட்டிலி வேகவைப்பது போல குக்கரில், நீராவியில்தட்டின் மேல்வைத்து 12 நிமிஷங்கள் ஸ்டீம் செய்யவும்.
ஸ்டீம் அடங்கினவுடன் தாம்பாளத்தில் கொட்டி உதிர்த்து ஆற விடவும்.
முந்திரியை வறுத்து பொடித்துக் கொள்ளவும் ஏலக்காயையும் பொடித்து வெந்த மாவுடன் சேர்க்கவும்.தேங்காயையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
பாத்திரத்தில் சிறிது ஜலம் சேர்த்து வெல்லத்தை அடுப்பில் வைத்து
பாகாகக் காய்ச்சவும். பாகு கெட்டியாக ஆரம்பிக்கும் சமயம் பாகை,உதிர்த்தமாவில் கொட்டி நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். புட்டு தயார். முக்கால்பாகம் வெந்த பருப்பைக்கூட நன்றாகப் பிழிந்து அரை கரண்டி்யளவிற்கு புட்டில் சேர்ப்பதுண்டு.
Entry filed under: இனிப்பு வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed