பூந்தி boondhi
ஒக்ரோபர் 28, 2009 at 10:43 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவை—–ஒருகப் கடலைமாவு
கால்கப் அரிசிமாவு, கேஸரி கலர் ஒருதுளி
ருசிக்கு உப்பு, கால் டீஸ்பூனிலும் பாதியளவு சமையல் ஸோடா இவைகளை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
செய்முறை——–மாவுக் கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
குழிவான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பூந்தி தேய்க்கும் கரண்டியில் [உபகரணத்தில்] முக்கால் கரண்டி மாவை விட்டு, எண்ணெயினின்றும் தூக்கலாக கரண்டியைப் பிடித்துக்கொண்டு, குழிக்கரண்டியின் அடிப் பாகத்தினால் மாவைத் தேய்க்கவும்.
பூந்திகள் எண்ணெயில் விழுந்து பொரியும். கிளறி விட்டு சல்லிக் கரண்டியினால் பூந்தியை எடுத்து வடிக்கட்டியில் போட்டு எண்ணெய் நீக்கவும். இப்படியே மிகுதி மாவையும் பூந்திகளாகத் தயாரிக்கவும்.
கரகர என்ற பதத்தில் வேகவிட்டு எடுக்கவும்.
வறுத்த முந்திரி, வேர்க்கடலை முதலானவற்றுடன், உப்பு ,காரம், காயம் பொடிகள் சேர்த்து பூந்தியைக் கலந்து கொடுக்கலாம்.
தயிர்ப் பச்சடி செய்யவும் பூந்தியை உபயோகிக்கலாம். மிக்சர் செய்யவும் உபயோகமாகும்.
லட்டு செய்ய தனி கடலைமாவில் பூந்தி செய்ய வேண்டும். அதைப் பிறகு எழுதுகிரேன்.
Entry filed under: கடலை மாவின் கரகரப்புகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed