நெல்லிக்காய்ப் பச்சடி.
நவம்பர் 7, 2009 at 7:20 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவை—புளிப்பில்லாத தயிர் ஒருகப். கொட்டை நீக்கியநெல்லிக்காய் இரண்டு. மிளகாய்வற்றல் ஒன்று, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள்ஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன்,
தாளிக்க கால்டீஸ்பூன் கடுகு, துளி பெருங்காயம், எண்ணெய் ஒரு டீஸ்பூன் பச்சைக் கொத்தமல்லி சிறிது,ருசிக்கு உப்பு.
செய்முறை——நெல்லிக் காயை சிறிது வதக்கிக் கொண்டு மிளகாய் தேங்காய், சீரகம் சேர்த்து
கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்துத் தயிரில் கலக்கவும்,. காயம் ,கடுகை தாளித்துக் கொட்டி கொத்தமல்லியைத் தூவவும். பச்சடி தயார். மிகவும் நல்ல மருத்துவ குணமுள்ள பச்சடி.
வெங்காயம் விரும்புவர்கள் எந்தப் பச்சடியிலும் சிறிது எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைத் தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் போட்டுப் பிழிந்து எடுத்து தயிர்ப் பச்சடி செய்யலாம்.
இஞ்சியைப் பிரதான பாகமாகச் சேர்த்தால் இஞ்சிப் பச்சடி.
கத்தரிக் காயை சுட்டு தோல் நீக்கிப் பிசைந்து தயிரில் போட்டுச் செய்யலாம்.
காரட் ,முள்ளங்கியையும் துருவிப் போட்டு செய்யலாம்.
பழ வகைகளைத் துண்டுகளாகச் சேர்த்துத் தயிரில்க் கலந்து சாட் மஸாலா சேர்த்தும் பச்சடி செய்யலாம்.
சௌ,சௌ, பாலக், புடலங்காய் உருளைக் கிழங்கு முதலான வற்றையும் பொடியாக நறுக்கி வேகவைத்தோ, அல்லது வதக்கியோ தயிரில்க் கலந்து பச்சடி செய்யலாம்.
இன்னும் எது எது தோதுபடுகிரதோ வகைவகையாகச் செய்யலாம்.
வறுத்த உளுத்த மாவு சேர்த்து ஓமம், பச்சை மிளகாய் தாளித்து டாங்கர் பச்சடி தயிரில் செய்யலாம்.
வடைமாவைக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுத்தும் தயிர்ப் பச்சடி செய்யலாம்.
பூண்டு வதக்கிப் போட்டும் செய்யலாம். பிடித்த ருசிக்குத் தக்கவாறு பொருள்களைத் தேர்வு செய்து அசத்துங்கள்.
சேனைக் கிழங்குத் துண்டை வேகவைத்து அரைத்தும் கலக்கலாம்.
எல்லாப் பச்சடிக்கும் இஞ்சி, தேங்காய் , உப்பு, பச்சை மிளகாய் கூட்டிக் குறைத்து ருசிக்கு ஏற்ப தயாரிக்கவும்.
Entry filed under: பச்சடிவகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed