ஸாம்பார்ப் பொடி.
திசெம்பர் 23, 2009 at 6:08 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டிய ஸாமான்கள்
கால் கிலோ மிளகாய் வற்றல்
அரைகிலோ கொத்தமல்லி விதை
துவரம் பருப்பு 150 கிராம்.
கடலைப் பருப்பு 150 கிராம்.
விரளி மஞ்சள் 100 கிராம்.
மிளகு 100 கிராம்.
வெந்தயம் 100 கிராம்.
செய்முறை ——எல்லா ஸாமான்களையும், நல்ல வெய்யிலில் தனித்தனியாக
காய வைத்து.மஞ்சளைத் துண்டு செய்து சேர்த்து , மிளகாய் அரைக்கும் மிஷினில்
அரைத்து, சூடுபோக ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைக்கலாம்.
குண்டு மிளகாயாக இருந்தால் காம்பை நீக்க வேண்டாம். நீளவாகு மிளகாயாக
இருந்தால் காம்பை நீக்க வேண்டும். வீட்டில் குறைந்த அளவு. மிக்ஸியில்
செய்வதானால் நன்றாக வறுத்தே செய்ய வேண்டும். மிஷினில் ்அரைக்கும்
பொடியை அவ்விடமே பெரிய பேப்பரில் பரத்தி. ஆறவைக்க வேண்டும்.
காய்ந்த கறிவேப்பிலை சேர்த்து அரைப்பதும் உண்டு.
Entry filed under: பொடி வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed