பச்சைக் கொத்தமல்லிப் பொடி
ஜனவரி 6, 2010 at 11:21 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவை———சுத்தப்படுத்தி ஈரமில்லாது நறுக்கிய பச்சைக் கொத்தமல்லித் தழை–3 அல்லது 4 கப்
உளுத்தம்பருப்பு கால்கப்
கடலைப்பருப்பு கால்கப்
பெருங்காயம் சிறிது
எண்ணெய் ஒருஸ்பூன்
ஒரு பெரிய கோலி அளவு கெட்டியாக உருட்டிய புளி
மிளகாய் வற்றல் 6 அல்லது ஏழு
ருசிக்கு உப்பு
செய்முறை——–வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பருப்புகளையும்
மிளகாயையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
கலவை ஆறிய பின்னர் உப்பு பெருங்காயம் சேர்த்து
மிக்ஸியில் இவைகளை உதிர்உதிரான பருமனான
பக்குவத்தில் பொடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு நறுக்கிய கொத்தமல்லியையும், புளியையும
சேர்த்துத் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்தவிழுதில் தயாராகி வைத்துள்ள கரகரப்பான
பொடியைக் கொட்டி ஒரு சுற்று சுற்றவும்.
ஈரத்தை பருப்புகள் உறிஞ்சிக் கொள்ளும்.
சுவையான பொடி தயார். ;சற்று சேர்ந்தாற் போல
இருந்தாலும் சரியாகிவிடும். வைத்தும் உபயோகிக்கலாம்.
தோசை இட்டிலி முதல், தயிர் சாதம்வரை சுவை கொடுக்கும்.
கொத்தமல்லியை அலம்பி ஈரம் போக துணியில் பரத்தி
உலர வைத்து உபயோகிக்கவும்.
Entry filed under: பொடி வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed