மோர்க்களி.
மார்ச் 7, 2010 at 11:02 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்.
மிதமான புளிப்பு மோர்—இரண்டரைகப்
மெல்லியதாகச் சலித்த அரிசி மாவு—ஒரு கப்
எண்ணெய்——இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–ஒரு டீஸ்பூன்
மோர் மிளகாய்——மூன்று
ருசிக்கு உப்பு
வாஸனைக்கு–துளி பெருங்காயம்
சிறிது கறிவேப்பிலை.
செய்முறை——-மாவை உப்பு சேர்த்து மோரை விட்டு கரைத்துக்
கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து
மிளகாயை நன்றாக கிள்ளிப்போட்டு வறுத்துக் கொண்டு
கடுகு, பெருங்காயம்,உளுத்தம்பருப்பைச் சேர்த்துத் தாளித்து
கறி வேப்பிலையுடன் கரைத்து வைத்திருக்கும் மாவுக்-
-கலவையைச் சேர்த்துக் கிளறவும். தீயை நிதானமாக
வைத்து அடிக்கடி கிளறவும். மாவு வெந்து சுருண்டு
வரும் போது சற்று மூடி வைத்துப் பிறகு இறக்கவும்.
ஈரக் கையினால் மாவைத் தொட்டால் வெந்த மாவு
கையில் ஒட்டாது. உப்பு, புளிப்பு, காரத்துடன் களிப்பதத்தில்
சாப்பிட ருசியாக இருக்கும்.
சோளமாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவிலும் இதே மாதிரி
தயாரிக்கலாம். அவசரத்திற்கு, நினைத்தால் உடனே தயாரிக்க
முடியும். தாளிப்பில் வேர்க்கடலை, முந்திரி பருப்பும் போடலாம்.
Entry filed under: டிபன் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed