அடை.
மார்ச் 15, 2010 at 11:39 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்
அரிசி—-முக்கால் கப்
கடலைப் பருப்பு-கால்கப்பிற்கு சற்று அதிகம்
துவரம் பருப்பு–கால்கப்
உளுத்தம் பருப்பு—ஒருபிடி
வற்றல்மிளகாய்–இரண்டு
தேங்காய்த் துருவல்–5 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி–கால் டீஸ்பூன்
அடை செயவதற்கு வேண்டிய—–எண்ணெய்
பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது சிறிதளவு.
ருசிக்கு—-உப்பு
செய் முறை—–கரகரப்பாக அடை வேண்டுமானால் அதிக
நேரம் அரிசி பருப்பு வகைகளை ஊறப்போடாமல் 3 அல்லது4-
-மணி நேரம் களைந்து ஊறவைத்து அதிக ஜலம் விடாமல்,
உப்பு, காரம் சேர்த்து நறநறப்பாக அறைத்துக் கொள்ளவும்.
பெருங்காயம், தேங்காய்த் துருவல்,கொத்தமல்லி சேரத்துக்
கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான தோசைக்கல்லிலோ, நான் ஸ்டிக்தோசைக்-
-கல்லிலோ, திட்டமான சூட்டில் எண்ணெய் தடவி அடையை
தடித்த தோசை அளவில் பறத்தி வார்க்கவும். நடுவில்தோசை
திருப்பியால் ஒரு பொத்தலிட்டு அதிலும், சுற்றிலுமாக சற்று
தாராளமாக ஸ்பூனினால் எண்ணெயைவிட்டு அடையை
வேக விடவும். வெந்தபின் அடையைத்திருப்பிப் போட்டு
சிறிது எண்ணெயை சுற்றிலும் விட்டு நிதான தீயில்
கரகரப்பாக ஆகும்வரை வைத்து எடுக்கவும்.
இது சாதாரண அடை.
புழுங்கலரிசி, முழு உளுந்தை ஊற வைத்தரைத்தும்
உப்பு காரம் சேர்த்து அடை செய்யலாம்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி பெருஞ்சீரகம் இவைகளை
சேர்த்து அரைத்தும் செய்யலாம்.
முளைக்கீரை,பாலக், முருங்கைக் கீரை புதிநா சேர்த்தும்
செய்யலாம்.
கோஸ், கேரட், காலிப்லவர், பரங்கிக் காய் இவைகளைத்
துருவிச் சேர்த்தும் அடை வார்க்கலாம்.
சின்ன வெங்காயம், நறுக்கிச் சேர்த்தால் கூடுதல் ருசி.
பருப்புகள் மற்ற வகைகளையும் ஊற வைக்கும் போது
கலந்து செய்யலாம்..
தகுந்தாற்போல உப்பு காரமும் கூட்டிக் குறைத்துச்
சேர்க்கவும்.
நெய், தேங்காய் எண்ணெயும் சேர்த்து செய்தால் ருசி
கூடும்.
முள்ளங்கி, நூல்கோல்கூட விதி விலக்கில்லை.துருவிப்
பிழிந்து போடலாம். ஏதாவதுஒன்றிரண்டு தேர்வு செய்து
கலக்குங்கள். அடை மாவையும்தான். கலவையைப்
பொறுத்து அடையின் பெயர் சொல்லுங்கள்.எதற்கு
எது சேர்த்தால் சுவைகூடும். அது உங்கள் சாய்ஸ்.
Entry filed under: டிபன் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed