புளி அவல்.
மார்ச் 16, 2010 at 11:19 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்——-அவல்—2 கப்
நெல்லிக்காயளவு– புளி.–கால்கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
மிளகாய் வற்றல்—-2,—அதிக காரம் வேண்டுமானால் பச்சைமிளகாய்1
தனியாப் பொடி—அரை டீஸ்பூன்
சீராப்பொடி–அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி—கால் டீஸ்பூன்
உப்பு——ருசிக்கு ஏற்ப
நல்லெண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க—கடுகு, பெருங்காயப் பொடி,சிறிது
மேலும் ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பும்,
வேர்க் கடலையும்
வாஸனைக்கு கறி வேப்பிலை
அரை டீஸ்பூன்—-வெல்லப்பொடி.
செய்முறை—-அவலைக் காய்கறி வடிக்கட்டியில் போட்டு
மேலாகத் தண்ணீரை விட்டுக் கலந்து வடிக்கட்டி வைத்துக்
கொள்ளவும்.
புளியைக் கறைத்துக் கெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.
நான் ஸ்டிக் வாணலியில் எண்ணெயைக் காய வைத்து தாளிக்க ,வேண்டியவைகளைத் தாளித்து சீரக தனியா,கறிவேப்பிலை
மஞ்சளைச் சேர்த்துப் பிரட்டி புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.
உப்பு, வெல்லம் சேர்த்துக் கிளறி புளித்தண்ணீர் சுண்டும் வரை
நிதான தீயில் வைக்கவும்.
திக்கான பதம் வரும் போது ஊறின அவலைக் கொட்டி பதமாகச்
சூடு ஏறும் வறை கிளறி இறக்கவும் .
என்னுடைய வழக்கமான வார்த்தை பூண்டு, வெங்காயம்
வேண்டுபவர்கள் தாளிப்பின் போது சேர்த்துச் செய்யலாம்.
இதுவும் ருசியான டிபன்தான்.
புளிக்குப் பதில் தக்காளிப்பழ சாற்றைக் குறுக்கியும்
செய்ய முடியும்.
Entry filed under: டிபன் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed