வெண் பொங்கல்.
மார்ச் 18, 2010 at 10:25 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்
பச்சரிசி——1 கப்
பயத்தம் பருப்பு—அரைகப். பருப்பை சற்று சிவக்க வறுத்து
அரிசியைச் சேர்த்து ஒரு பிரட்டல் பிரட்டி இறக்கவும்.
நெய்—-கால்கப்
மிளகு–ஒன்றரை டீஸ்பூன்
ஜீரகம்—-1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—-சிறிது
தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிய இஞ்சி–1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு—10
வாஸனைக்கு—கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி
கறி வேப்பிலை—-சிறிதளவு
மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
சாதம் சமைக்க அரிசிக்கு எந்த அளவில் ஜலம்வைப்போமோ
அந்தக் கணக்கில் ஜலத்தை எடுத்துக் கொண்டு வைக்கலாம்.
சில வகைகளுக்கு 3 பங்கு ஜலம். சில வகைகளுக்கு 2 பங்கு
அதனால் இப்படி எழுதுகிறேன்
வறுத்த அரிசி பருப்பைக் களைந்து 3 கப்பிற்கு அதிகமாகவே
தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடி கலந்து குக்கரில் ஸப்ரேட்டரில்
வைத்து ,ஒரு விஸில் , அதிகமாகவே வரும்படிவைத்துக் குழைய
வேக விடவும்.
முந்திரியை வறுத்து ஒடித்துக் கொள்ளவும்.
நிதானமான தீயில் நெய்யைக் காய்ச்சி மிளகு ஜீரகத்தைப்
பொரித்து பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து
வேண்டிய உப்பு போட்டு வெந்த கலவையில் கொட்டிக்
கிளறவும். முந்திரி சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து
சுடச்சுட பறிமாரவும். பாஸுமதி அரிசியானால் 2 பங்கு
ஜலம்.
பொன்னி வகை பழய அரிசியானால் 3 பங்கு ஜலம். தவிர
பருப்பிற்கும் சேர்த்து நெகிழ தயாரிப்பதற்கு அதிகமாகவே
ஜலம் வைக்கவும்.
சட்னி, கொத்ஸு வகைகள் சேர்த்துச் சாப்பிட நன்றாக
இருக்கும்.
Entry filed under: டிபன் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed