பத்திய தோசை.
மார்ச் 20, 2010 at 10:38 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்
புழுங்கலரிசி——ஒன்றறை கப்
வெந்தயம்—–2 டீஸ்பூன்
துவரம்பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு–அரைகப்
தாளிக்க—-கடுகு, மிளகு அரை டீஸ்பூன்
சீரகம், பெருங்காயம்—-சிறிதளவு.
ருசிக்கு உப்பு
தோசை செய்ய நல்லெண்ணெய்
செய்முறை————–அரிசி ,பருப்புகள், வெந்தயத்தை நன்றாகக்
களைந்து தண்ணீரில் ஊற வைத்து கிரைண்டரில் போட்டு குறைந்த
அளவு ஜலம் சேர்த்து நன்றாக அறைத்து உப்பு சேர்த்து எடுக்கவும்.
மாலையில் அரைத்தால் காலையில் செய்ய சரியாக இருக்கும்.
புளித்து விடும் எனறு தோன்றினால் பாதி மாவை பிரிஜ்ஜில்
வைத்தெடுத்து கலந்து உபயோகிக்கலாம்.
கடுகைத் தாளித்து, மிளகு சீரகத்தைத் தட்டிப் போட்டு சற்று
கெட்டியாகவே மாவை உபயோகிக்கலாம்.
குழிவான தோசைக் கல்லிலோ, நான் ஸ்டிக் பேனிலோ
எண்ணெய் தடவி தோசையைக் கனமாகப் பரப்பி சுற்றிலும்
எண்ணெய் விட்டு மிதமான தீயில் திட்டமான மூடி ஒன்றினால்
மூடி வேக விடவும்.
2 நிமிஷ இடை வெளியில் மூடியைத் திறக்கவும். தோசை அடி
சிவந்து வெந்திருக்கும். சற்று நிதானித்து தோசையைத் திருப்பிப்
போட்டு துளி எண்ணெய் விட்டு முருகலான பதத்தில் எடுக்கவும்.
மிளகாய்ப்பொடி, சட்னிகளுடன் ருசியாக இருக்கும்.
எண்ணெய் குறைவாக விட்டால் பத்திய தோசைதான்.
மெல்லியதாகவும் வார்க்கலாம்.
Entry filed under: டிபன் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed