ரவை உப்புமா.
மார்ச் 20, 2010 at 6:57 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்
நல்ல பெரிய ரவை—–1 கப் சூடாக வறுத்துக் கொள்ளவும்.
காய் கறிகள் போட்டுச் செய்தால் ருசி கூடும்.
கேரட்—–1 நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம்—பெறியதான ஒன்றை நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைப் பட்டாணி—கால்கப்
கோஸ்—-நறுக்கியது முக்கால் கப்
கேப்ஸிகத் துண்டுகள்—கால்கப்
பச்சை மிளகாய்—–2 நீளவாட்டில் நறுக்கவும்
இஞ்சித் துண்டுகள்—2 டீஸ்பூன்
கறிவேப்பிலை—சிறிது
தாளிக்க—எண்ணெய்—2 டேபிள் ஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
முந்திரி 5 அல்லது 6
எலுமிச்சம் பழம் ஒரு மூடி
ருசிக்கு் உப்பு
செய்முறை——வாணலியிலோ, நான் ஸ்டிக் பானிலோ
எண்ணெயைக் காய வைத்து, கடுகு, பருப்பு வகைகளைத்
தாளித்து, இஞ்சி,மிளகாய்,கறிவேப்பிலை வெங்காயத்தைச் சேர்த்து
வதக்கி, நறுக்கி அலம்பியுள்ள காய்களையும் சேர்த்து
வதக்கவும். 2 கப் ஜலம் சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்பும், நெய்யும் சேர்க்கவும்.
தீயைக் குறைத்து கொதிக்கும் ஜலத்தில் ரவையைச்
சீராகக் கொட்டிக் கிளறவும். ரவை சேர்ந்தார்ப்போல
வெந்து வரும்போது மறுபடியும்ஒரு முறைக் கிளறி
தட்டினால் மூடி 2 நிமிஷம் வேக வைத்து இறக்கவும்.
எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து கலந்து பறிமாரவும்.
தாளிப்பில் சீரகம், பெருங்காயம் சேர்க்கலாம்.
காய்கள் போடாது வெங்காயம் சேர்த்தும், எலுமிச்சைக்குப்
பதில் தக்காளி சேர்த்தும் செய்யலாம்.
ரவையை மைக்ரோவேவ்விலும் வைத்து வறுத்துக்
கொள்ளலாம். சீக்கிரம் தயாரிக்க முடியும் டிபனிது.
Entry filed under: டிபன் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed