பாகற்காய் வறுவல்.
மார்ச் 22, 2010 at 7:25 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்-
-4 அல்லது5 பாகற்காய்களை நறுக்கி விதைகளை நீக்கி
மெல்லியத் துண்டங்களாகச் செய்துகொள்ளவும்.
.அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துப் பிசறி ஊற விடவும்.
மற்றும்
மஞ்சள் பொடி– அரை டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி—1 டீஸ்பூன்
சர்க்கரை—-1 டீஸ்பூன்
கடலைமாவு—கால்கப்
அரிசி மாவு —1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி—-1 டேபிள் ஸ்பூன்
உப்பு—ருசிக்கு
பெருங்காயப் பொடி—-அரை டீஸ்பூன்
மாவில் கலக்க—1 ஸ்பூன் நெய்
வறுவல் வறுப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்
செய்முறை
பாகற்காயை கசக்கினாற் போல ஒட்டப் பிழிந்து எடுக்கவும்.
சிறிது உப்பு, காரம், நெய் புளிப்பு,இனிப்பு யாவற்றையும்,
கலந்து மேலாக மாவுகளைத் தூவி உதிர் உதிராகப்
பிசறவும்.
எண்ணெயைக் காயவைத்து உதிர்த்த மாதிரி தளர்களைப்
போட்டு முறுகலாக வறுத்தெடுத்து உபயோகிக்கவும்.
அரிசி மாவிற்குப் பதில் ஓட்ஸ் கலந்தும் உபயோகிக்கலாம்.
காற்று புகாதபடி டப்பாக்களில் வைத்து 4 அல்லது5 நாட்கள்
கூட வைத்து உபயோகிக்கலாம். பிசறலில் தண்ணீர் சேர்க்கக்
கூடாது.
Entry filed under: வறுவல்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed