தக்காளிப்பழ கொத்ஸு.
மார்ச் 22, 2010 at 10:20 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்
பொடியாக நறுக்கிய தக்காளிப்பழம்–4 கப்
நறுக்கிய சாம்பார் வெங்காயம்—1கப்
பச்சை மிளகாய்—-2 நறுக்கிக் கொள்ளவும்….
ரஸப்பொடி அல்லது கறிப் பொடி—1 டீஸ்பூன்
தாளிக்க—-எண்ணெய் —-3 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைப் பருப்பு ஒவ்வொரு டீஸ்பூன்
ஒரு கோலியளவு—புளி
ருசிக்கு உப்பு , துளி வெல்லம்
ஒரு டீஸ்பூன்—அரிசி மாவு.
செய்முறை—–புளியை ஊற வைத்து ஒரு கப் ஜலத்தில்
கரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி
கடுகு, பருப்பு வகைகளைத் தாளித்து வெங்காயம், பச்சை-
-மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம்
வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கி புளித்
தண்ணீரைச் சேர்க்கவும். உப்பு, வெல்லம், பொடி சேர்த்து
கொதிக்க விடவும். நன்றாக வெந்தவுடன் அரிசி மாவில்
ஒரு கரண்டி ஜலம் சேர்த்துக் கரைத்து விடவும்.கொத்ஸு
கெட்டியாக இருந்தால் கொதிக்கும் போதே, மாவு கரைத்து
விடுவதற்கு முன்பே வேண்டிய அளவு தண்ணீர் சேர்க்கவும்.
கத்தரிக்காய், பரங்கிக்காய், கேரட் ,இஞ்சிமுதலானதும் சிறியதாக
நறுக்கி வதக்கும் போது சேர்க்கலாம். காரம் புளிப்பு முதலானது
அதிகம் செய்யும்படியிருக்கும். பொங்கல், இட்லியுடன் ஜோடி
சேரும்.கொத்ஸு தயார்.கறிவேப்பிலை மறக்காமல் சேர்க்கவும்.
தனியாப் பொடி, மிளகாய்ப் பொடி, ரஸப் பொடிக்குப் பதிலாகவும்
சேர்க்கலாம்.
Entry filed under: குழம்பு வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed