தாளகம்
மார்ச் 23, 2010 at 11:36 முப பின்னூட்டமொன்றை இடுக
இது ஒரு கலந்த ருசிக் குழம்பு
வேண்டியவைகள்.—–பூசணி, பறங்கி, சௌசௌ முதலான
காய்களிலும், சேப்பங் கிழங்கு, வெள்ளிக் கிழங்கு முதலான
கிழங்கு வகைகளிலும், சேர்த்தும், தனித்தும் விருப்பம்
போலச் செய்யலாம்.
பச்சைப் பட்டாணி, மொச்சைப்பருப்பு சேர்க்கலாம்.
காயைத் தோல் நீக்கிச் சற்றுப் பெரிய துண்டங்களாக
நறுக்கிக் கொள்ளவும்
கிழங்குகளானால் வேக வைத்துத் தோல் உறித்துக்
கொள்ளவும், கால் கிலோ அளவிற்குஇருக்கலாம்
புளி—-1 எலுமிச்சை அளவு. ஊற வைக்கவும்.
கறி வேப்பிலை—-உறுவியது-அரைகப் அளவு
உளுத்தம் பருப்பு—-ஒன்றறை டீஸ்பூன்
அரிசி—1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்–4
வெல்லம்—-1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல்—–1 மூடி துருவியது
தாளிக்க—எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம்.
சிறிது மஞ்சள் பொடி. ருசிக்கு உப்பு
செய்முறை—-காய்களைக் கலந்து செய்வதானால் மொத்தமாக
கால் கிலோவிற்கு அதிகமாகவே இருக்கட்டும். காய்களைச்
சிறிது வேகவிட்டு ,வேக வைத்த கிழங்குத் துண்டங்களையும்
சேர்த்து, புளியைக் மூன்று கப் அளவிற்கு ஜலம் சேர்த்துக்
கரைத்துச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள், வெல்லம் போடவும்.
நன்றாகக் கொதிக்க விடவும்
முதலிலேயே வெறும் வாணலியில் தனித் தனியாக
உளுத்தம் பருப்பு, மிளகாய் ,அரிசியை சிவக்க வறுத்துக்
கொள்ளவும்.
தேங்காய், கறிவேப்பிலையையும்சற்று வறுத்து யாவற்றையும்
ஆறின பின் மிக்ஸியிலிட்டு நன்றாக, திட்டமாக ஜலம்
விட்டு அரைக்கவும்.
இவ்வாறு அறைத்த விழுதைக் கரைத்து, புளி வாஸனை
போகக் கொதித்த கலவையில் கொட்டி ஒரு கொதி விட்டு
இறக்கவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டவும்.
புளிப்பு, இனிப்பு, காரம் கலந்த ஒரு தனிச் சுவை.
பருப்புப் பொடி, பொரித்த துவையல் சாதங்களுக்கு ஏற்ற
ஒரு சக ஜோடி. மிகவும் சுலபமாகச் செய்ய முடியும்.
பச்சை மிளகாயும் சேர்க்கலாம்.
Entry filed under: குழம்பு வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed