தயிர் வடை.
மார்ச் 26, 2010 at 8:43 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்
உளுத்தம் பருப்பு——1 கப்
துவரம் பருப்பு—-கால்கப்
புளிப்பில்லாத கெட்டித் தயிர்——-3 கப்
வடை பொறித்தெடுக்க வேண்டிய எண்ணெய்
பச்சைமிளகாய்—–7
இஞ்சி——ஒரு அங்குலத் துண்டு
வேண்டிய உப்பு
சீரகம்—1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—–1 கப்
பெருங்காயம்—-அரை டீஸ்பூன
கடுகு——1 டீஸ்பூன்
துருவிய கேரட்——அரைகப்
இலையாகக் கிள்ளிய கொத்தமல்லி—-கால்கப்
சின்ன சைஸ் தக்காளிப் பழம்—-3. பிரிஜ்ஜில் வைத்தெடுத்து ஸ்லைஸ் செய்யவும்.
செய்முறை
பருப்புகளைக் களைந்து 2, 3, மணிநேரம் ஊற வைத்து வடிக்கட்டி மிக்ஸியிலோ,
கிரைண்டரிலோ தண்ணீர் விடாமல் கெட்டியாக நன்றாக அரைக்கவும்
அரைஸ்பூன் உப்பு,பெருங்காயம் ஒரு மிளகாய் அரைக்கும் போது போட்டால் போதும்.
தேங்காயையும், மீதி மிளகாய்,சீரகத்தை அரைடீஸ்பூன் ஊறின அரிசியுடன்
இஞ்சி சேர்த்து மிக்ஸியிலிட்டு பூப்போல மென்மையாக அரைத்தெடுக்கவும்.
தயிரைக் கடைந்து , அறைத்த தேங்காய்க் கலவையைக் கலந்து
திட்டமாக உப்பு சேர்த்து பிரிஜ்ஜில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அரைத்த மாவை
அதிகம் ஊற விடாமல் திட்டமான வடைகளாகத் தட்டி
வேகவைத்து எடுக்கவும்
கையில் ஜலத்தைத் தொட்டு இலையிலோ, பாலிதீன் கவரின் மேலோ
வடையைத் தயாரிக்கலாம்.
ஒவ்வொரு முறையும் எடுக்கும் வடைகளை ,வெது வெதுப்பான,
தண்ணீரில் 2 நிமிஷம் போட்டு சற்றே பிழிந்தாற்போல அகலமான
தாம்பாளத்தில் வைக்கவும். தண்ணீரை அடிக்கடி மாற்றவும்.
பூரா வடைகள் தயாரானவுடன் தயிரை வெளியிலெடுத்து தாளிக்கவும்.
|ஒவ்வொரு வடையாக த் தயிரில் நன்றாகமுக்கி எடுத்துவேறொரு
குழிவான தாம்பாளத்தில் இடைவெளி விட்டுப் வடைகளைப் பரத்தி
வைக்கவும். மேலாகத் தயிர்க் கலவையை லேசாக விடவும்.
ஒவ்வொரு வடையின் மீதும் சிறிது கேரட் துருவல், அதன்
மீது மெல்லிய தக்காளி ஸ்லைஸ், மேலாகத் பச்சைக் கொத்தமல்லித்
தழை என கலர்க் கலராக அலங்கரிக்கவும்.
மிகுதியுள்ளத் தயிரை கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு வைத்து
வேண்டியவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
மாவைத் தண்ணீர் அதிகம் சேர்க்காது அறைக்க வேண்டும்.
காரம் அதிகம் வேண்டுமாயின் சேர்த்துக் கொள்ளவும்
சின்ன ப்ளேட்டில் வடையை வைத்து தயிர்க் கலவையைச்
சேர்த்துக் கொடுக்கவும்.
அதிகம் தயிர் வேண்டுமானால் கலந்து கொள்ளவும்.
தயிர் வடை ரெடி.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed