முழு உளுந்து மஸாலா.
மார்ச் 27, 2010 at 11:57 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்
கருப்பு முழு உளுந்து—–1 கப்
ராஜ்மா—–கால்கப்
இஞ்சி—-1 அங்குலத் துண்டு
பூண்டு—–7 —-8,இதழ்கள்
வெங்காயம்—-பெரியதாக 3
தக்காளிப் பழம்–2
மிளகாய்ப் பொடி—-1 டீஸ்பூன்
தனியாப் பொடி—1 டீஸ்பூன்
பெரிய ஏலக்காய்—-1
லவங்கம்—–5
பட்டை—-மிகச் சிறிய அளவு
வெண்ணெய்—-2 டீஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
ருசிக்குத் தேவையான—-உப்பு
தக்காளி ஸாஸ் 2 டீஸ்பூன்
செய்முறை—–உளுந்து,ராஜ்மாவை முதல் நாள் இரவே களைந்து
தண்ணீரில் ஊற வைக்கவும்.
பட்டை லவங்கத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு, வெங்காயத்தைத் தனியே நறுக்கி அரைத்துக்
கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
தக்காளியையும் தனியே அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை——ஊற வைத்தத் தண்ணீரை இறுத்துவிட்டு, உளுந்தை
4 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேகவிடவும்.
2—3 —-விஸில் வந்த பிறகு தீயை ஸிம்மில் வைத்து
7,—-8 நிமிஷங்கள் வேக வைத்து இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காயவைத்து, ஏலக்காய்,
வெங்காய விழுதைப்போட்டு நன்றாக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் சமயம் வரை வதக்கி
மிளகாய்,தனியாப்பொடி. மஸாலா சேர்த்துக் கிளறி
அரைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாகச் சேர்ந்து வரும் போது எடுத்து, வெந்த
உளுந்தில் சேர்க்கவும்.
உப்பு, டொமேடோ ஸாஸ் கலந்து வெண்ணெயையும்
சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கவும்.
தளர்வு செய்ய வேண்டுமானால் கொதிக்கும் போதே
ஜலம் சேர்க்கவும்.
க்ரீம் சிறிது சேர்த்தாலும் ருசி கூடும்.
ரொட்டி, சாதம் என எதனுடனும் சாப்பிடலாம்.
காரம் கூட்ட மிளகாய்ப் பொடி அதிகம் போடவும்.
Entry filed under: டால் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed