பருப்பரிசி உசிலி.
ஏப்ரல் 5, 2010 at 11:50 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்.
அரிசி—-1 கப்
பயத்தம் பருப்பு—-ஒரு கப்பின் மூன்றிலொரு பாகம்
தேங்காய்த் துருவல்—-அரை கப்
எண்ணெயும், நெய்யுமாக—-2 டேபிள் ஸ்பூன்
கடுகு. உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு, தலா 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—-கால் டீஸ்பூன்.
மிளகாய்—2
ருசிக்கு—உப்பு
இஞ்சித் துண்டுகள்—1 டீஸ்பூன்
கறிவேப்பிலை—-சிறிது.
செய்முறை——-அரிசி, பருப்பைத் தனித் தனியாக சிவக்க வறுக்கவும் தண்ணீர்விட்டுக் களைந்து நீரை இறுத்து வைக்கவும்.
ப்ரஷர் பேனிலோ, சின்ன குக்கரிலோ நெய் ,எண்ணெயைக்
காயவைத்து , கடுகு, மிளகாய்,பருப்புகள், பெருங்காயம் சேர்த்து
சிவக்க வறுத்து, தேங்காயைப் போட்டு ஒரு முறை பிரட்டி
இஞ்சி,கறிவேப்பிலையுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து
கொதிக்க விடவும்.
திட்டமான உப்புடன் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்த்து குக்கரில்
ஒரு விஸில் வரும்வரை வைத்து, மேலும் ஸிம்மில் 4 நிமிஷம் வரை
வைத்து இறக்கவும்.
நீராவி அடங்கிய பின் கரண்டிக் காம்பினால் ஒரு கிளறு கிளறி
மூடி வைத்து இரண்டொரு நிமிஷம் கழித்து உபயோகிக்கவும்
சாதம் வைக்க அரிசிக்கு எந்தக் கணக்கில் ஜலம் வைப்போமோ
அந்தக் கணக்கு ஜலம் வைத்தால் போதும்.
பருப்பிற்காக வேண்டாம்.
உதிர் உதிராக உசிலி தயார்.
துவையல், கொத்ஸு, பச்சடிகளுடன் சாப்பிட முழு உணவாக
இருக்கும்.
பச்சைப் பட்டாணி , முந்திரிப் பருப்பு முதலானவை சேர்த்து
ருசியைக் கூட்டலாம்.
Entry filed under: டிபன் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed