மல்லி ரைஸ்
ஏப்ரல் 19, 2010 at 9:58 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்—மெல்லிய ரக அரிசி—1கப். உதிர் உதிராக சாதம்
வடித்து ஆறவைக்கவும்.
நல்ல இளசான பச்சைக் கொத்தமல்லி வேர் நீக்கி அலம்பி சுத்தம்செய்து நறுக்கியது—–2கப்பிற்கு அதிகமாகவே இருக்கலாம்.
புளி——ஒரு சின்ன நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய்-ஒன்று.
நல்லெண்ணெய்—–2 டேபில்ஸ்பூன்.
கடுகு –அரை டீஸ்பூன்
சீரகம்–அரைடீஸ்பூன்
பெருங்காயப்பொடி—-கால் டீஸ்பூன்
வறுத்த முந்திரிப் பருப்பு—-8
செய்முறை—–கொத்தமல்லி, புளியை தண்ணீர் விடாமல், கெட்டியாக
அரைத்தெடுக்கவும்.
வேர்க் கடலையோ, முந்திரிப் பருப்போ, வறுத்ததை ஒன்றிரண்டாகப்
பொடித்துக் கொள்ளவும்.
நான் ஸடிக் பேனில் எண்ணெயைக் காயவைத்து கடுகு பெருங்காயம்,மிளகாய்
சீரகம் தாளித்து ,அரைத்த விழுதை ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கொட்டி
நன்றாக வதக்கவும். எண்ணெய் பிரியுமளவிற்கு சுருள வதக்கி இறக்கவும்.
வேண்டிய அளவு உப்பு சேர்த்து கலவையை சாதத்தில் கொட்டிக் கலக்கவும்.
பொடித்த பருப்பையும் சேர்த்துக் கலந்து உபயோகிக்கவும்.
துளி சர்க்கரை சேர்ப்பது, பச்சைக் கலர் மாறாமல் இருப்பதற்காக.
மல்லி ரைஸ் பற்றியும் நான் தெரிந்து கொண்டது ஒரு சமையல்க்
கலைஞரிடம்தான். நமக்குத் தோன்றும் துவையல் சாதம் என்று.
ஆனால் பந்தியில் வகைகளில் ப்ளஸ் ஒன்றாகத் தோன்றியது.
Entry filed under: சித்ரான்னங்கள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed