டொமேடோ ரைஸ்
ஏப்ரல் 25, 2010 at 11:42 முப 1 மறுமொழி
வேண்டியவைகள்—-ஒருகப் அரிசி. உதிர் உதிராக சாதம் வடித்து
ஆற வைத்துக் கொள்ளவும்.
தக்காளிப் பழம்—திட்டமான அளவில் 5
பெரிய வெங்காயம்—–1
இஞ்சி ஒரு துண்டு
மிளகாய்ப் பொடி—-அரை டீஸ்பூன்
தாளிக்க—-எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு——அரை டீஸ்பூன்
வேர்க்கடலை——2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—–1 டீஸ்பூன்
டொமேடோ ஸாஸ் —ஒரு டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
கறி வேப்பிலை —-வாஸனைக்கு
செய்முறை——தக்காளி, இஞ்சி, வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியிலிட்டு
ஜலம் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, பருப்பு வகைகளைத்
தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். ஸாஸ் உப்பு,
மிளகாய்ப்பொடி சேர்த்து எண்ணெய் பிரியுமளவிற்கு சுருளக் கிளறவும்.
கறி வேப்பிலையையும், ஆறின சாதத்தையும் சேர்த்துக் கிளறி , சாதம்
சூடானவுடன் இறக்கி உபயோகிக்கவும். சுலபமாகச் செய்யக் கூடியது.
தக்காளியின் புளிப்பிற்கேற்ப காரம், புளிப்பைக் கூட்டிக் குறைக்கவும்.
Entry filed under: சித்ரான்னங்கள்.
1 பின்னூட்டம் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 10:15 முப இல் செப்ரெம்பர் 24, 2015
இந்த முறையில் செய்து பார்த்ததில்லை இதுவும் முயன்று பார்க்கிறேன்.