ஆவக்காய் மாங்காய்.
மே 4, 2010 at 11:32 முப பின்னூட்டமொன்றை இடுக
இந்த ஊறுகாய் நிறைய மாதங்கள் வரை கெட்டுப் போகாது.
பிரிஜ்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. சரியான முறையில்
பாதுகாத்தால் நல்ல ருசியைக் கொடுக்கும்.
வேண்டியவைகள்.—–நல்ல புளிப்புள்ள முற்றிய மாங்காய் 12
அலம்பி துடைத்து பெரிய துண்டுகளாக உள் ஓட்டுடன் வெட்டிக்
கொண்டு , உள் பருப்பை மட்டிலும் நீக்கி பரவலாக தாம்பாளத்தில்
ஒரு மணி நேரம் உலர்த்திக் கொள்ளவும்.
சிவப்பு மிளகாயில் தயாரித்த மிளகாய்ப் பொடி–கால்கிலோ
கடுகு —-150 கிராம். நன்றாக வெய்யிலில்க் காயவைத்து மிக்ஸியில்
நைஸாக பொடித்துக் கொள்ளவும்.
வெந்தயம்— 50 கிராம். வெய்யிலில் காய வைத்து சுத்தப்
படுத்தி வைத்துக் கொள்ளவும்.
நல்லெண்ணெய்—-அரைகிலோ
உப்பு —பொடித்தது—-150 கிராம்.
மஞ்சள் பொடி—3 டேபிள் ஸ்பூன்
ஊறுகாயில் விறுப்பத்திற்கிணங்க சேர்க்கக் கூடியவைகள்
வெய்யிலில் காயவைத்து உறித்த பூண்டு–100 கிராம்
சுத்தப் படுத்திய கொண்டைக் கடலை–100 கிராம்
சுத்தப் படுத்திய முறுங்கைக்காய்த் துண்டுகள் 15 ஐ
துடைத்து வைக்கவும்.
ஒரு களிம்பேராத பாத்திரத்தில் மிளகாய்ப் பொடி, உப்பு, வெந்தயம்
கடுகுப்பொடி மஞ்சள்பொடி இவற்றை ஒன்றுசேர்த்து
கலக்கி எண்ணெயைச் சேர்த்து பஜ்ஜி மாவு போலக்
கலக்கவும்.
நல்ல ஜாடியை வெய்யிலில் காயவைத்துத் தயாராக வைக்கவும்.
அகன்ற தாம்பாளத்தில் மாங்காய்த் துண்டுகளைச் சிறிது சிறிதாக
போட்டு எண்ணெய்க் காரக்கலவையை மேலே போட்டுப் பிசறி
ஜாடியில் நிரப்பவும். பூரா கலவையைச் சேர்க்கவும்.
பூண்டு, கடலை எது விருப்பமோ அதை மாங்காயுடனே சேர்த்து
விடவும்.
ஜாடியைத் துணியினால் வாயைக்கட்டி ஒருநாள் வெய்யிலில்
வைத்து எடுக்கவும்.
அடிக்கடி உலர்ந்த மரக் கரண்டியினால்க் கிளறி மூடவும்.
நல்ல சைஸ் மாங்காய்க்கான அளவு இது.
உப்பு ருசிக்கேற்ப பின்பும் சிறிது கூட்டலாம்.
வெந்தயம் வறுக்கவோ பொடிக்கவோ வேண்டாம்.
எண்ணெய் .அதிகம் இருந்தால்தான் ஊறுகாய்
.கெடாமலிருக்கும்
யோசனையாக இருந்தால் பின்னுமொரு நாள் முதலிலேயே
வெய்யிலில் வைக்கவும்.
ஊற ஊற ருசியாக இருக்கும். ஊறின பிறகு எப்பொழுதாவது
கிளறினால்ப் போதும். காற்றுப் புகாமல் அழுத்தமாக மூடி
உபயோகிக்கவும். பூண்டு போடாவிட்டால் பெருங்காயம்
ஒரு பெரிய கோலி அளவிற்குப் பொடித்துச் சேர்க்கவும்.
Entry filed under: ஊறுகாய் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed