காஞ்சீபுரம் இட்லி
மே 6, 2010 at 10:35 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்
பச்சரிசி—–முக்கால் கப்
புழுங்கலரிசி—-முக்கால்கப்
நல்ல வெள்ளை உளுத்தம் பருப்பு—1 கப்
முந்திரிப் பருப்பு—10 சிறியதாக உடைத்துக் கொள்ளவும்.
கடுகு—-1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு—1டேபிள் ஸ்பூன்
மிளகு, சீரகம்–ஒவ்வொரு டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—-கால் டீஸ்பூன்
இஞ்சித் துண்டுகள்—-1 டீஸ்பூன்
தேவைக்கு—உப்பு
நல்லெண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
நெய்——-2 டேபிள் ஸ்பூன்
கரிவேப்பிலை—–சிறிது.
தயிர் 1 ஸ்பூன்
செய்முறை.
அரிசி, பருப்பைக் களைந்து தனித் தனியே ஊற வைக்கவும்.
மிக்ஸியிலோ, கிரைண்டரிலோ அரிசியை ரவைபோலவும்,
பருப்பைக் கெட்டியாகவும் அதிகம் தண்ணீர் விடாமல் நன்றாக
அரைத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன், தயிரும் திட்டமாக உப்பும் சேர்த்து மாவுகளை
ஒன்றாகச் சேர்த்துக் கரைத்து 7, 8 மணி நேரம் ஊற விடவும்.
இட்லி வார்ப்பதற்கு முன் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப்
பொடித்துச் சேர்க்கவும்.
எண்ணெயில் கடுகு,பருப்பு வகைகளைத் தாளிக்கவும்.
நெய்யில் முந்திரியை வறுத்து இஞ்சி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து வதக்கி மாவில் கலக்கவும்
மிகுதி எண்ணெய், நெய்யையும் மாவில் கலக்கவும்.
சாதாரணமாக இட்லி வார்ப்பது போல எண்ணெய் தடவிய
ஸ்டேண்டில் மாவை வார்த்து ஸ்டீம் செய்து எடுக்கலாம்.
ஸ்டீம் செய்யும் நேரம் குறைந்தது 20 நிமிஷங்கள் வேண்டும்.
தட்டையாக விளிம்புள்ள தட்டில் எண்ணெய் தடவி மாவை
விட்டு ஸ்டீம் செய்து எடுத்து, இட்லியைத் துண்டு செய்தும்
உபயோகிக்கலாம். ஸ்டீல் டம்ளர்களில் , கப்புகளில் எண்ணெய்
தடவி மாவை விட்டு ஸ்டீம் செய்தும் துண்டு செய்யலாம்.
ஆக மொத்தம் மாவை இட்லிகளாகச் செய்து விருப்பமான
சட்னிகளுடன் சேர்த்து உபயோகிக்கவும்.
Entry filed under: டிபன் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed