ஜவ்வரிசி வடை
மே 15, 2010 at 7:59 முப 2 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்
ஜவ்வரிசி—–1கப்
வேர்க்கடலை—முக்கால் கப்
தயிர்—1கப்
திட்டமான சைஸ்—-உருளைக் கிழங்கு 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
நறுக்கிய கொத்தமல்லித் தழை கால்கப்
மிளகுப் பொடி–அரை டீஸ்பூன்
சீரகம்—அரை டீஸ்பூன்
தேவைக்கு–உப்பு
பொரிப்பதற்கு வேண்டிய- எண்ணெய்
செய்முறை——ஜவ்வரிசியைக் களைந்து இறுத்து தயிரில்
3 மணி நேரம் ஊற வைக்கவும்.
உருளைக் கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்.
வேர்க்கடலையை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக்
கொள்ளவும்.
ஊறின ஜவ்வரிசியை அழுத்திப் பிழிந்தெடுக்கவும்.
வேர்க் கடலைத் தூள், மசித்த உருளைக் கிழங்கு உப்பு
காரம், மிளகு, சீரகம், கொத்தமல்லி யாவற்றையும் சேர்த்து
அழுந்தப் பிசையவும்.
வடை செய்ய ஒரே சீராக மாவைப் பிரித்து உருட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து வடைகளைத்
தட்டிப் பொரிக்கவும்.
எண்ணெய் தடவிய இலையிலோ, பாலிதீன் பேப்பரிலோ
திட்டமாகத் தட்டி இரண்டு புரமும் சிவக்கும்படியாக திருப்பி
விட்டுப் பொரிக்கவும்.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 11:28 முப இல் ஓகஸ்ட் 18, 2015
எண்ணெய் குடிக்காமல் இருக்குமா? ஒரு முறை முயன்றேன். எண்ணெய் குடித்து விட்டது. ஜவ்வரிசி உப்புமா (சாபுதானா கிச்சடி) சரியாக வருகிறது. இது என்னமோ சரியா வரலை! 😦
2.
chollukireen | 11:53 முப இல் ஓகஸ்ட் 23, 2015
நம்முடைய எல்லா பருப்புகளும் சேர்த்துத் தட்டும் ஆம வடைபோல எண்ணெய் குடிக்காமலிருக்காது. வேர்க்கடலைப்பொடி சேர்ப்பதால் ஓரளவு மாவு இருக்கமாகும். உளுந்து வடைபோல அதிகம் எண்ணெய் சிலவிராது. ஒரு மாறுதலுக்கு எப்பொழுதாவதுதானே செய்கிறோம். சிலஸமயம் எல்லாவற்றிலுமே லேசாக சிக்கல்கள் வருகிறது. அப்படி இருந்திருக்கும். ஸரியா?