தக்காளித் தொக்கு
மே 16, 2010 at 10:20 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்
நல்ல கெட்டியான தக்காளிப் பழம்——-1 கிலோ
காய்ந்த புளி—1 பெரிய எலுமிச்சை அளவு
இஞ்சி—-100 கிராம்
பொடிக்க
வற்றல் மிளகாய்—-15
கடுகு——2டீஸ்பூன்
வெந்தயம்—-1டீஸ்பூன்
சீரகம்—-2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—3 டீஸ்பூன்
தாளிக்க [வதக்க]—-நல்லெண்ணெய் அரைகப்
ருசிக்கு—-உப்பு
செய்முறை —-அகன்ற ஸ்டீல் பாத்திரத்தில் சுத்தம் செய்த
தக்காளியைப் போட்டு, அதன்மேல் பழங்கள் அமிழும்படி
வேரொரு பாத்திரத்தில் கொதிக்க வைத்தத் தண்ணீரைவிட்டு
மூடி வைக்கவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில், சிவக்க வறுக்கவும.
கடுகு, சீரகத்தையும் வெறும் வாணலியில் வறுக்கவும்.
நிதான தீயில் அரை ஸ்பூன் உப்புப் பொடியுடன் மிளகாயையும்
கறுகாமல் வறுத்தெடுக்கவும்.
மிளகாயைத் தனியாகவும், கடுகு,வெந்தயம், சீரகத்தைத்
தனியாகவும். பொடித்துக் கொள்ளவும்.
தண்ணீர் ஆறியவுடன் நீரை வடித்துவிடவும்.
தக்காளியின் தோல் உறிக்க வரும். ஒவ்வொரு தக்காளியாக
எடுத்துத் தோலை உறிக்கவும்.
இஞ்சியைத் தோல் நீக்கிப் .பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளி, இஞ்சியுடன் புளியையும் பிய்த்துப் போட்டு மிக்ஸியில்
தண்ணீர் விடாமல் அரைத்தெடுக்கவும்.
அடி அகலமான நான் ஸ்டிக் வாணலியில் பாதி எண்ணெயைக்
காயவைத்துச் சிறிது கடுகைத் தாளித்து அறைத்த விழுதைக்
கொட்டிக் கிளறவும்.
குறைந்த தீயில் அடிக்கடி கிளறி மூடவும்.
மிகுதி எண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
தண்ணீர் வற்றி கலவை சுருண்டு வரும் போது உப்பு,
மஞ்சள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும்
சுருளக் கிளறி, கீழ் இறக்கி மிளகாய்,கடுகு சீரக வெந்தயப்
பொடிகளைச் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் போதாவிட்டால்
கிளறும் போதே சற்று அதிகம் சேர்க்கவும். ஆறியபின் பிரிஜ்ஜில்
வைத்து உபயோகிக்கவும். வெய்யில் காலம். எண்ணெய் பிறிந்து
வருமளவிற்கு கெட்டியாக பொருமையாகக் கிளறவும்.
காற்றுப் புகாத பாட்டில்களில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.
Entry filed under: தொக்கு வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed