காபூலி செனா சுண்டல்
செப்ரெம்பர் 16, 2010 at 1:07 பிப பின்னூட்டமொன்றை இடுக
வெள்ளை முழுக் கடலை—–1கப்
தேங்காய்த் துருவல்—கால்கப்
கறிப்பொடி—–2ஸ்பூன்
ஆம்சூர்—அரை டீஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
பெருங்காயம்—-சிறிது
பச்சை கறிவேப்பிலை—சிறிது
ருசிக்கு உப்பு
செய்முறை—–இதையும் பட்டாணி சுண்டல் மாதிரியே முதல்நாளே
ஊறவைத்து மறுநாள் ப்ரஷர் குக்கரில் நன்றாக வேகவைத்து
எடுத்துத் தண்ணீரை வடிக்கட்டவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து
தேங்காயையும், சற்று வதக்கி,வெந்த கடலையுடன் உப்பு
சேர்த்து கறிப்பொடி, ஆம்சூர் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சாதாரண ப்ரவுன்கலர் கடலையானால் வேக சற்று அதிக
நேரம் வைக்க வேண்டும். சுண்டலின்
கடுகு தாளிப்பில், இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை தாளித்து
உப்பு சேர்த்து பல்லு,பல்லாக நறுக்கிய தேங்காயும் மாங்காயும்
சேர்த்து இறக்கி கொத்தமல்லியைத் தூவலாம்.
தாளித்துக் கொட்டும் போது பலதினுஸான சுவையும், மணமும்
கொண்ட பொருட்களைச் சேர்த்தால் ருசி தனிப்பட்டதாக இருக்கும்.
சாதாரண நாட்களாக இருந்தால் வெங்காயம், பூண்டையும்,
அணிவகுக்கச் சொல்லலாம்.
Entry filed under: சுண்டல் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed