காய்ந்த பட்டாணி சுண்டல்
செப்ரெம்பர் 16, 2010 at 12:17 பிப பின்னூட்டமொன்றை இடுக
இதை வெள்ளைப் பட்டாணியிலும், பச்சை அல்லது பழுப்பு நிற
காய்ந்த பட்டாணியிலும், தயாரிக்கலாம்.
வேண்டியவைகள்—-பட்டாணி—1கப்
பச்சை மிளகாய்–2
தேங்காய்த் துருவல்—கால்கப்
இஞ்சி—-சிறு துண்டு
எண்ணெய்–4 டீஸ்பூன்
கடுகு–அரை டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—கால் டீஸ்பூன்
நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி—–விருப்பத்திற்கு
ருசிக்கு எலுமிச்சை சாறு
உப்பு—-ருசிக்கேற்ப
செய்முறை—–பட்டாணியை முதல் நாளே களைந்து தண்ணீரில்
ஊறவைக்கவும்.
மிளகாய் இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து ஒன்றிரண்டாக
பொடித்துக் கொள்ளவும்.
ப்ரஷர் குக்கரில் பட்டாணி அமிழ ஜலம் வைத்து நிதான
தீயில் 5, 6 விஸில் வரை வைத்து இறக்கி ஆவி போனபின்
தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
வாணலியில் எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து
தேங்காய்க் கலவையைச் சேர்த்து சிறிது வதக்கி வெந்த
பட்டாணியை உப்பு சேர்த்து வதக்கவும்.
உப்பு காரம் கலந்தவுடன் இறக்கி, ருசிக்கேற்ப, எலுமிச்சை
சாற்றைக் கலந்து, கொதத்தமல்லியைத் தூவி த் தயார்
செய்யவும்.
கொத்தமல்லி கறிவேப்பிலை அவரவர்கள் சாய்ஸ்.
பட்டாணி குழையாமல் வேக வேண்டியது அவசியம்.
Entry filed under: சுண்டல் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed