பச்சைப் பயறு சுண்டல்
செப்ரெம்பர் 16, 2010 at 2:11 பிப பின்னூட்டமொன்றை இடுக
பச்சைப் பயறு—–1கப்
பச்சை மிளகாய்—-2
இஞ்சி—-சிறிது
காரட் துருவல்—-அரைகப்
எண்ணெய்—-4டீஸ்பூன்
சீரகப்பொடி—அரை டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
கடுகு—அரைடீஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—-விருப்பத்திற்கு
செய்முறை—-பயறை ஊறவைத்து ஜலம் சேர்த்து வேக வைத்து
வடிய வைக்கவும்.
இதற்கு கடலை, பட்டாணி போல அதிக விஸில் வைத்து
வேக வைக்க வேண்டாம்.
சீக்கிரம் வெந்து போகும்.
தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து, காரட்துருவலை
வதக்கி சீரகப்பொடியுடன் வெந்த பயறையும் உப்பு சேர்த்து
சற்றே வதக்கி இறக்கவும். சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து
கொத்தமல்லியைத் தூவவும். மேலும் சுண்டல்களுக்கு
சீரகம், பெரு்ஞ்சீரகம், என,மசாலா பொடி, சாட்மஸாலா,
கறிப்பொடிஎன்று வாஸனைக்கு, சிறிது பொடிகளைச்
சேர்த்து, புளிப்பிற்கு அனார்தானா, ஆம்சூர்,பச்சைமாங்காய்,
எலுமிச்சை என வித்தியாஸமான வகைகளைச் சேர்க்கவும்.
கசகசாப்பொடி, புதிநாப்பொடிமுதலியனவும் ருசி கூட்டும்.
மொச்சை,நிலக்கடலை, வேர்க்கடலை, பட்டாணி, பெரும்பயறு,
காராமணி, பீன்ஸ் விதைகள், கொள்ளு ராஜ்மா
முதலானவற்றிலும், 2தினுஸுகள் சேர்த்தும் செய்யலாம்.
சிலவகை, பருப்புகளிலும் மிதமாக வேக வைத்தும் செய்யலாம்.
வெல்லம் சேர்த்தும் காராமணி, பயறு போன்றவைகளைச்
செய்யலாம். தேங்காய் எல்லாவற்றிறகும் ஜோடி சேரும்.
ஏதோ மனதிற்குப் பிடித்ததை ஜோடி சேர்த்து வித்தியாஸமான
சுண்டல்களைத் தயாரிக்கலாம்.
Entry filed under: சுண்டல் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed