காரட் பருப்பு கோசுமல்லி
செப்ரெம்பர் 22, 2010 at 10:01 முப பின்னூட்டமொன்றை இடுக
;வேண்டியவைகள்——பயத்தம் பருப்பு—-1கப
தேங்காய்த் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
காரட் துருவல்—-2டேபிள் ஸ்பூன்
வெள்ளரித் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது—–1டேபிள்ஸ்பூன்
துருவிய இஞ்சி—-1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்——2
ருசிக்கு உப்பு
தாளிக்க—எணெணெய்—-2டீஸ்பூன்
கடுகு, சீரகம் சேர்த்து——1டீஸ்பூன்
எலுமிச்சம் பழம்—-1
செய்முறை
பருப்பைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை
வடிக்கட்டவும்.
பிழிந்த வெள்ளரித் துருவல்,தேங்காய்த் துருவல்,கேரட்
துருவல், இஞ்சி,கொத்தமல்லி வகைகளைப் பருப்புடன்
சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
எண்ணெயில் கடுகு சீரகத்தைத் தாளித்து மிளகாயைவதக்கி
பருப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
சாப்பிடும் போதோ, பறிமாறும் போதோ உப்பு, எலுமிச்சை-
-சாறு கலந்து உபயோகிக்கவும்.
காப்ஸிகத் துண்டுகள் வதக்கியும், பச்சைப் பட்டாணி அப்படியே
சேர்த்தும், தக்காளி சேர்த்தும் ,செய்யலாம்.
வேண்டியவர்கள் வெங்காயம், பெருங்காயம் சேர்க்கலாம்.
Entry filed under: கோசுமல்லி.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed