அவல் புட்டு
ஒக்ரோபர் 7, 2010 at 7:28 முப பின்னூட்டமொன்றை இடுக
இதுவும் சுலபமாகச் செய்யலாம்.
வேண்டியவைகள்——கெட்டி அவல்—–1 கப்
பொடித்த பாகு வெல்லம்—–முக்கால் கப்
தேங்காய்த் துருவல்—–5 டேபிள்ஸ்பூன்
நெய்—–1டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்—-4 பொடித்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ அல்லது கேஸரி பவுடர்—-ஒரு துளி
துவரம்பருப்பு——-4, 5 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு——விருப்பத்திற்கு தக்கபடி
செய்முறை——வெறும் வாணலியில் மிதமான சூட்டில் அவலை சிவக்க
வறுத்து கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
லேசாக கை பொருக்கும் வென்னீரில் சிறிது தெளித்து பொடித்த அவலைப்
பிசறி ஊற வைக்கவும். பிடித்தால் பிடிக்கவும் விட்டால் உதிரும்படியும்
இருக்க வேண்டும்.
துவரம் பருப்பை நெத்து பதத்தில் [முக்கால் வேக்காடு] வேகவிட்டு
பருப்பைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ,சற்றே வருத்த தேங்காய், ஏலப்பொடி, பருப்பு
இவைகளை பொடித்த அவலுடன் கலக்கவும்.
வெல்லம் நினைய, ஜலம் சேர்த்து நல்ல முதிர்ந்த பாகாகக்
காயவைக்கவும்
ஒரு தாம்பாளத்தில் அவலைக் கொட்டி , பாகை அதன் மேல்
கொட்டிக் கலக்கவும்.
முந்திரியை வறுத்துச் சேர்த்து நெய்யுடன் கலக்கவும்.
ஆறின பிறகு உபயோகிக்கவும்.
துவரம் பருப்பிற்கு பதில் பயத்தம் பருப்பையும் வறுத்து
முக்கால் பதம் வேகவிட்டுப் பிழிந்தும் சேர்க்கலாம்.
ஷீலா நீ கேட்டதை எழுதிவிட்டேன்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed