ஆலு தாம்
ஒக்ரோபர் 26, 2010 at 1:59 பிப பின்னூட்டமொன்றை இடுக
இதுவும் ரொட்டி, பூரி, ஏன் தோசையுடன் கூட சேர்த்துச்
சாப்பிட நல்லதொரு ஜோடி.
வேண்டியவைகள்
சிறியவகை பேபி பொடேடோ—-அரைகிலோ
பொடிக்க மிளகு–1 டீஸ்பூன்,லவங்கம் 6, சின்ன துண்டுபட்டை
அறைக்க–வெங்காயம்.—-2 திட்டமான அளவு
பூண்டு—4 இதழ்,, இஞ்சி சிறிய துண்டு
தக்காளிப்பழம்–2
வேண்டிய பொடிகள்
தனியா பொடி—2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—–1 டீஸ்பூன்
கரம் மஸாலா பொடி—அரை டீஸ்பூன்
மஞ்சள்பொடி—அரை டீஸ்பூன்
பிரி்ஞ்சி இலை–ஒன்று
உருளைக்கிழங்கு பொரிக்க —வேண்டிய எண்ணெய்
மஸாலா வதக்க– 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை—–உருளைக் கிழங்கை வேகவைத்து தோலை
உறிக்கவும். அதிகமாக வேக வேண்டாம்.
பொடிக்கக் கொடுத்திருப்பதை பொடித்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு வெங்காயத்தைத் தனியாக அரைக்கவும்.
எணெ்ணெயைக் காயவைத்து ஜீரகம் தாளித்து, வெங்காய
இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு நிதான தீயில் வதக்கவும்.
விழுது ப்ரவுன் கலராக மாறியதும், பொடிகளைச் சேர்த்துப்
பிரட்டி,தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
எண்ணெய் பிறியுமளவிற்கு வதக்கிப் பிறகு 2 கப்பிற்கு
சற்று அதிகமாகவே தண்ணீரைச் சேர்த்து வேண்டிய
உப்பைப் போட்டு கொதிக்க விடவும்.
வேறு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
உறித்து வைத்திருக்கும் முழு உருளைக் கிழங்கை
சிறிது சிறிதாகப் போட்டு சற்று சிவக்கப் பொரித்து
கொதிக்கும் கலவையில் சேர்த்து கொதிக்கவிட்டு
சேர்ந்தாற்போல் ஆகும்போது இறக்கி கொத்தமல்லி
தூவி உபயோகிக்கவும். வேண்டிய அளவு காரம் கூட்டிக்
குறைக்கவும்.
தக்காளி அறைப்பதற்குப் பதில் 150 கிராம் டொமேடோ
ப்யூரியை சேர்த்தும் கொதிக்க விடலாம்.
கலர் சிவப்பாக நன்றாக இருக்கும்.
ப்ரி்ஞ்சி இலையைச் சேர்க்கவும்.
Entry filed under: கறி வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed