அம்ருத்காஸப்ஜி.
ஜனவரி 27, 2011 at 6:16 முப 4 பின்னூட்டங்கள்
அம்ருத்கா ஸப்ஜி ரொட்டியுடன் நன்றாக இருந்தது.
பேரைப் பார்த்து எப்படி செய்வது என்ன ஏது என்று
விசாரித்தேன். போபால் மருமகளின் அம்மா, என்
சம்மந்தி கொடுத்த குறிப்பு இது. கொய்யாப் பழம்
முக்கியமானது. இதை ஸப்ஜி வகையாக அவர்கள்
ரொட்டியுடன் சாப்பிடுவதால் இது அம்ருத்கா ஸப்ஜி.
நமக்கு இனிப்பு கார பச்சடியாகத் தோன்றும்.
வேண்டியவைகளைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—-பழுத்தும், பழுக்காததுமான பெரிய
கொய்யாப் பழங்கள்——2 ஒரேசைஸ் துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும்.
நெய்—-2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—கால் டீஸ்பூன்
கடுகு,சீரகம்,வகைக்கு கால் டீஸ்பூன்
தனியாப்பொடி–ஒரு துளி
ருசிக்கு உப்பு
மஞ்சள்பொடி -ஒருதுளி
சக்கரை—2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை.—–நான்ஸ்டிக் பேனில் நெய்யை நன்குசூடாக்கி
கடுகு, சீரகத்தைத் தாளித்து,சில பழத் துண்டுகளுடன் எல்லா
பொடிகளையும்சேர்த்துப் பிரட்டி மீதிப் பழத்துண்டுகளையும்
சேர்த்து சில நிமிஷங்கள் வதக்கி திட்டமாக,உப்பு
சேர்த்துவேக விடவும்.அரைகப்தண்ணீரும், சக்கரையும்
சேர்த்துக்கொதிக்கவிட்டு சேர்ந்து வரும்போது இரக்கவும்.
அதிகம் வேக வேண்டாம்.
பழத்தின் அளவிற்குத் தகுந்தபடி தண்ணீரைக் குறைவாகச்
சேர்க்கவும். கெட்டியாகவோ, தளர்வாகவோநம்விருப்பத்திற்கு
ஏற்ப செய்யவும். இது ஒரு ஜெயின் சமூகத்தினரின் ஸ்பஷல்.
தளர இருந்தால் பச்சடி. சற்று கெட்டியாக இருந்தால் ஸப்ஜி.
இனிப்பு, உப்பு, காரம், விருப்பப்படி சேர்க்கவும். பழம் சற்று
பழுக்காதிருந்தால் இரண்டு கொதி அதிகம் விட்டால் போதும்.
சுவையான, மணமான, இனிப்பும்காரமுமான ஸப்ஜிதயார்.
ரொட்டிக்கு ,ஏற்ற ஸப்ஜி இது. நாம் தயாரிக்கும்போது இஞ்சி
கூட சேர்க்கலாம். எதுவும் சேர்க்காமல் அசல் கொய்யாப்பழ
சுவையுடன் நன்றாகவே இருக்கிறது. எளிதான குறிப்பு.
இரண்டு துண்டு பழத்தால் அலங்கரிக்கவும்.
Entry filed under: ஸ்வீட் கார பச்சடிகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 3:59 பிப இல் ஜனவரி 27, 2011
பெயர் வித்தியாசமாக உள்ளது.எனக்கு ஒரு சந்தேகம்.விதைகளை எடுத்துவிட்டு சமைக்கனுமா?நேற்றுதான் கடையில் இருந்து நான்கு பழங்கள் வாங்கி வந்தேன்.அதில் ஒன்றை முற்சிக்கலாம் என நினைக்கிறேன் இங்கு விலை கூடுதலாக இருந்தாலும் பழம் புதிதாக இருந்தால் வாங்கி விடுவேன்.அதில் மிளகாய்த்தூள்&உப்பு சேர்த்து சாப்பிடுவோம்.
எங்கள் வீட்டில் (அம்மா வீடு&மாமியார் வீடு)பெரிய பெரிய கொய்யாத் தோப்புகளே உள்ளன.ஒருசில மரங்களின் பழங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும்.அதில் பறித்த பழங்களை தினமும் வீட்டிற்கு எடுத்து வருவார்கள்.கொய்யாப் பழத்தின் மூலமாக மீண்டும் நினைவுகள் ஊருக்கு சென்றுவிட்டது.நன்றி.
2.
chollukireen | 9:38 முப இல் ஜனவரி 28, 2011
அம்ருத் என்றால் ஹிந்தியில் கொய்யாப்பழம். அவர்கள் சொல்வதை நானும் எழுதிவிட்டேன். பிரமாதமான தலைப்பில் விஷயம் ஒன்றுமில்லாத கட்டுரைகள் வருமே அதுமாதிரிதான்.
கிரேவி சற்று திக்காக வருவதற்கு விதைகளை எடுக்க வேண்டாம். பருப்பு தாளித்தமாதிரி தோற்றம் ஏற்படுகிரது. 1பழம் செய்து பார்த்தாலே போதும். மாற்றுப் பொருட்களில்லாமல் ஸுய வாஸனையுடன் இருப்பதுதான் இதன் விசேஷம். உங்களுடைய அக்கரைக்கு மிகவும் நன்றி
3.
மகி | 6:02 முப இல் ஜனவரி 28, 2011
கொய்யாப்பழ ரெசிப்பி பாத்திருக்கேன்,இங்கே பழம் கிடைக்காது.
அம்ருத் கா ஸப்ஜி நல்லா இருக்குங்கம்மா!
4.
chollukireen | 10:29 முப இல் ஜனவரி 28, 2011
நான் முதன் முறையாக இப்போதுதான் செய்தேன்.நன்றாக இருப்பதாக எழுதியிருந்தாய்.நன்றி. இங்கே கொய்யாப்பழ ஸீஸன் என்று நினைக்கிறேன். எனக்குப் பிடித்த பழம். ஜெனிவாவில் பார்க்கவேயில்லை.