கடலைப்பருப்பின் ஸப்ஜி
பிப்ரவரி 5, 2011 at 4:53 முப பின்னூட்டமொன்றை இடுக
இதுதான் கடலைப் பருப்பில் செய்யும் டால்.
அதிகம் அரைத்து, கரைத்து விடாமல் சுலபமாக
செய்யக்கூடிய ஒன்று. தனித்த கடலைப் பருப்பில்
செய்வது.
வேண்டியவைகள்–
கடலைப் பருப்பு —அரைகப்
பெரிய பழுத்த தக்காளிப்பழம்—1
தோல்நீக்கிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் அரைகப்
நெய்–1 டீஸ்பூன்
எண்ணெய் –2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி–கால் டீஸ்பூன்
மஞ்சள் பொடி –சிறிது
சீரகப்பொடி—கால் டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு —நறுக்கிய சில துண்டுகள்
ருசிக்கு—உப்பு
கொத்தமல்லித் தழை—வாஸனைக்கு
செய்முறை.—-பருப்பைத் தண்ணீர் விட்டுக் களைந்து
திட்டமாக ஜலம் சேர்த்து, மஞ்சளும் போட்டு,ப்ரஷர்–
—குக்கரில் மலர வேகவிடவும்.
வாணலியில் எண்ணெயும், நெய்யுமாக காயவைத்து
வெங்காயம்,இஞ்சி,பூண்டு வகைகளை நன்றாக வதக்கி,
பொடிகளையும் சேர்த்துப் பிரட்டி, தக்காளித் துண்டுகளை
-ச் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது ஜலம் சேர்த்துக்
கொதிக்க விடவும்.
உப்பு சேர்த்து, பருப்பைச் சற்று மசித்தமாதிரி வதக்கிய
கலவையில் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கி, மல்லித்தழை
தூவி உபயோகிக்கவும்.
ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிட இதுவும் ஒரு வகை. சில பேர்
ஒரு துளி சக்கரையும் சேர்க்கிரார்கள்.
விருப்பம்போல்எதையும் கூட்டிக்கழிக்கலாம்.அதுநம்கையில்
சிறிது புதிநா, பாலக் இவைகளை ப் பொடியாக நறுக்கி
வதக்கும் போது சேர்க்கலாம்.
Entry filed under: டால் வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed