கார சாரமான பூண்டுப் பொடி
மே 30, 2011 at 8:38 முப 7 பின்னூட்டங்கள்
இதைச் சின்ன அளவில் செய்து பாருங்கள். ஊறுகாய் போலவும்
சட்னிக்குப் பதிலாக அவசரத்திற்கும் உபயோகப்படும்.
இதுவும் கிராமங்களில் செய்யும் ஒரு ருசியான அவசர
தயாரிப்பு.
வேண்டியவைகள்
வேர்க் கடலை—3 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்— 3, அல்லது 4.
உறித்த பூண்டு இதழ்கள்—கால் கப்
ருசிக்கு உப்பு
பெருங்காயம்—வாஸனைக்கு
ஆம்சூர்—ஒரு டீஸ்பூன் அல்லது துளி புளி
ஒரு துளி எண்ணெய்
செய்முறை.
வெறும்வாணலியில்தனித்தனியாகஎள்ளையும்,வேர்க்கடலையையும்
சிவக்க வறுக்கவும்.
வேர்க் கடலையை கையினால் தேய்த்து தோலை நீக்கவும்.
துளிஎண்ணெயில் மிளகாயையும் சிவக்க வறுக்கவும்.
இவைகளைப் பெருங்காயம்சேர்த்துமிக்ஸியில்கரகரப்பாகப்
பொடிக்கவும்.
உறித்த பூண்டைதுண்டுகளாக்கி அரைத்த சாமான்களுடன்
உப்பு சேர்த்து சற்று மசியும்படி 2 சுற்று சுற்றவும்.
சேர்ந்தாற் போல வரும்.
ஆம்சூர். சேர்த்து சிறிய உருண்டைகளாகச் செய்துசிறிதுநேரம்
வெளியில் வைத்து பாட்டிலில்எடுத்துவைத்துஉபயோகிக்கவும்.
புளிப்புக்காக புளியோ, ஆம்சூரோ உபயோகிக்கவும்.
எள், வேர்க் கடலை உபயோகிப்பதால், எண்ணெய்ப் பசையுடன்
சேர்ந்தாற்போல இருக்கும். ஜலம் உபயோகிப்பதில்லை.
நீண்ட நாட்கள் கெடாது.
எள்மட்டிலும் சேர்த்தும், செய்யலாம்.
அதேபோல் வேர்க்கடலை மட்டும் சேர்த்தும் செய்யலாம்..
லின் ஸீட் சேர்த்தும் செய்யலாம். நான் நினைத்துக்
கொண்டேன் அக்ரூட், பாதாம், முந்திரி, ஸன்ப்ளவர் ஸீட்
என ஏதாவது வீட்டிலிருப்பதையும் ஏதாவதொன்றை சிறிது
சேர்த்தும் செய்து பார்க்க வேண்டுமென்று.
பூண்டை பச்சையாகவே வதக்காமல் போட வேண்டும்.
சற்று ஊற,ஊற பொடி சற்று உதிர் பதத்தில் வரும்.
காரம் வேண்டிய அளவிற்கு கூட்டவும். நான்
செய்தது,எள்,வேர்க்கடலை சேர்த்து செய்ததுதான்
சாப்பிடும்போது தனியாக சிறிது எடுத்து தயிர் கலந்தும் உபயோகிக்கலாம்.
Entry filed under: பொடி வகைகள்.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
மகி | 5:25 முப இல் ஜூன் 3, 2011
நல்லா இருக்கு காமாட்சிம்மா,சீக்கிரம் செய்துபார்க்கிறேன்.
2.
chollukireen | 12:35 பிப இல் ஜூன் 7, 2011
ஆமாமாம்.நான் செஞ்சு பார்த்து விட்டுதான் எழுதினேன். ருசி புரியறது. நன்றி
3.
chollukireen | 11:28 முப இல் ஜூன் 23, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
என்ன காமாட்சியம்மா பூண்டு போட்டு ஒரு பொடியா? நம் தோசை மிளகாய்ப் பொடியுடனும்போட்டுச் செய்பவர்கள் இருக்கிறார்கள். இது வேறு ஒருவிதம்.என்னைப்பார் என்று அதுவும் வருகிறது . மிகவும் புராதனமான பொடி. அன்புடன்
4.
ஸ்ரீராம் | 2:16 பிப இல் ஜூன் 23, 2021
இது போல செய்ததில்லை என்றாலும் என் அம்மா செய்து கொடுக்கும் பூண்டுப்பொடி எனக்கு மஃவும் இஷ்டம். அதுபோல நானும் அவ்வப்போது செய்துகொள்வேன். வதக்குவதோ, வேறு எதுவும் சேர்ப்பதோ இல்லை. பூண்டுப் பற்கள், பட்டை மிளகாய், உப்பு, அவ்வளவுதான். பொடிசெய்து வைத்துக் கொண்டால் நீண்ட நாளைக்கு வரும்.
5.
chollukireen | 11:27 முப இல் ஜூன் 24, 2021
இதுவும் மிகவும் சுலபமாக இருக்கிறது. நான் கூறியவிதமும் செய்து பாருங்கள். அன்புடன்
6.
நெல்லைத்தமிழன் | 3:24 பிப இல் ஜூன் 25, 2021
நான் மாம்பலத்தில் தள்ளுவண்டியில் விற்கும் குடந்தை மங்களம் மாமி பூண்டு பொடி வாங்குவேன். சுட சாத்த்தில் சேர்த்துச் சாப்பிட நல்லா இருக்கும். அதில் தேங்காய் சேர்த்திருக்கும்.
இந்த முறையில் பூண்டு வாங்கியபின் செய்கிறேன். என்னைத் தவிர யாரேனும் சாப்பிடுவாங்களான்னு யோசிக்கிறேன்.
7.
chollukireen | 11:29 முப இல் ஜூன் 26, 2021
பூண்டு சாப்பிடாதவர்கள் வீட்டில் இருந்தால் செய்வது கஷ்டமே. ஏதோ படித்தோம்,பார்த்தோம் என்று போகவேண்டியதுதான்.ரெடிமேடும் கிடைக்கிறதா? நான் என்னவோ மீள் பதிவு செய்து என் காலத்தைக் கழிக்கிறேன். நன்றி. அன்புடன்