சுட்டரைத்தத் துவையல்
நவம்பர் 8, 2011 at 7:05 முப 4 பின்னூட்டங்கள்
நல்ல பெறிய சைஸ் கத்தரிக்காயை
அனலில் சுட்டு துவையல்தயாரித்தால்சுவையாக இருக்கும்.
நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன்.
மிகவும் நன்றாகத் தோல்உறிக்க வந்தது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும்
ஜெனிவா குறிப்புதான் இதுவும்,
கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான்.
வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா.
வேண்டியவைகள்–கத்தரிக்காய் துவையலுக்காக—
கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2
வெங்காயம்—-திட்டமான அளவு 2
வெள்ளை எள்—–2 டீஸ்பூன்
புளி—–ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம்—சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை.
உப்பு–ருசிக்குத் தேவையான அளவு.
உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன்
கடுகு—1/4டீஸ்பூன்
வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும் குறைவு
மிளகாய் வற்றல்—-4
எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை—–அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும்.
மைக்ரோவேவில், அதன் பாத்திரத்தில், காயை வைத்து,ஹை பவரில் 3 நிமிஷங்கள்சூடாக்கவும்.
திரும்பவும் காயைத் திருப்பி வைத்து4 நிமிஷங்கள்அதேபோல் சூடாக்கி எடுக்கவும்.
காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உறித்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உ.பருப்பு,மிளகாய்,
வெந்தயம்இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்
.எள்,சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய்,புளி ,வெந்தயம்
இவற்றை மிக்ஸியில்இட்டுஜலம் விடாமல் கெட்டியாக அறைக்கவும்.
நன்றாக மசிந்த பின் உளுத்தம்பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துஉப்பைச் சேர்க்கவும்.
கடுகு, பெருங்காயப் பொடியை, மிகுதி எண்ணெயில் தாளிதம் செய்யவும்.
நல்லெண்ணெய், நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாகஇருக்கும்.
வெங்காயத்திற்குப் பதில் தேங்காயும், புளிக்குப் பதில்,வதக்கிய தக்காளியும்சேர்த்து அரைக்கலாம்.
புளி சேர்த்த துவையலில் சிவக்க வறுத்த வெந்தயம் ருசியைக் கொடுக்கும்.
சுட்ட கத்தரிக் காயுடன் துளி,தேங்காய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்தரைத்து
தயிரில் கலந்து கடுகு தாளித்தால் பச்சடி தயார்.
கொத்ஸு தயாரிக்கலம்.
இப்படி சுட்ட கத்தரிக் காயில் அநேகவிதம் தயாரிக்கலாம்.
அரைக்கும் போதே கொத்தமல்லி கறிவேப்பிலையை மறக்க வேண்டாம்.
உப்பு காரம் , தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.
பர்த்தா தயாரிப்பதும் இப்படி சுட்ட கத்தரிக்காயில்தான்.
கத்தரிக்காய் சேர்க்கும் பத்திய சமையலில் சுட்ட காயை மசித்து
துளி நெய்யில் கடுகு,சீரகம்,உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து,
உப்புபோட்டு கொடுப்பார்கள்
கிராமத்து ஐட்டம் இது. எதுவோ வேண்டியவர்கள் செய்து பாருங்கள்
.இரண்டாவதுபடம் மேலே வந்திருக்கிரது.கீழே 1, 3, 4.
Entry filed under: துவையல் வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 7:47 பிப இல் நவம்பர் 16, 2011
மைக்ரோவேவில் கத்தரிக்காயை சுட்டு செய்ததில்லை,உங்க பதிவு பார்த்ததும் சுட்டு பைங்கன் பர்தா செய்தேன் அம்மா! 🙂
அடுத்தமுறை சட்னி செய்து பார்க்கிறேன்.
2.
chollukireen | 9:53 முப இல் நவம்பர் 17, 2011
எது செய்தால் என்ன. கத்தரிக்காய் நன்றாக தீயாமல் பதமாக சுட்டுரிக்க முடிகிறது. உன் கமென்டிற்கு ஸந்தோஷம். சட்னி செய்து பார்க்கிறேனென்றாய். இன்னும் என்னவெல்லாம் செய்யமுடியும் என்றும் மனதிலே எண்ணங்களும் எழும். நான் இப்படி கற்பனை செய்து கொண்டேன்.அவ்வளவுதான்.
3.
Geetha Sambasivam | 2:49 முப இல் ஜூலை 8, 2015
கத்தரிக்காய்ச் சுட்டுத் தயிர்ப்பச்சடி பார்த்ததும் என் அம்மா நினைவு வந்தது. எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால் அடிக்கடி செய்து தருவார்கள். பத்தியச் சமையலிலும் இடம்பெறும். கத்தரிக்காய் சுட்டுத் துவையல் செய்யும் போது வெங்காயம் சேர்த்தது இல்லை. ஒரு முறை வெங்காயம் சேர்த்தும் செய்து பார்க்கிறேன்.
4.
chollukireen | 9:12 முப இல் ஜூலை 8, 2015
இந்த வெங்காயம் வேண்டுமென்றால் ஸரி. வேண்டாமென்றாலும் ஸரி. முதல் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சுட்டுப் பிசைந்ததுதான் வரும். அவ்வளவு ருசியாக இருக்கும் வறுத்த எள் புளிவைத்த துவையலில் ருசியைக் கூட்டும்.. உங்களுக்குத் தெரியாதது இல்லை. நம்ம ஊர்ப் பக்கமே இருப்பவர்கள் எல்லாவற்றிலும் வெங்காயமா என்பார்கள். இஷ்ட தேவதை வணங்குவது மாதிரி. ரொம்பவும் ஸ்வாதீனமாக எழுதுகிறேன்,. அன்புடன்