அன்னையர் தினம்—12

ஜனவரி 22, 2014 at 3:24 பிப 22 பின்னூட்டங்கள்

அதென்ன வேளைக்கீரை    ஸந்தேகம்  எல்லோருக்கும். எங்களூரில்

கல்யாண வயதில் பெண்களிருந்தால், வீட்டுத் தோட்டத்தில்,தப்புச்

செடியாக, வேளை  முளைத்தால், அது சுப சூசகமாகக் கருதப்படும்.

விவாகத் தேடல்களை சுருசுருப்பாகச் செய்தால், உடன் விவாகம் நடை

பெறும், என்ற ஒருநம்பிக்கை.

நம்பிக்கையில்லை, தேடலை ஊக்குவிக்கும் பூஸ்டர் என்றே சொல்லலாம்.

அந்த நாட்களில் குடும்பத்தில்,

பெண் ஒன்று பிறந்து விட்டாலே, அவர்களுக்கான, பாத்திரங்கள், ஏதாவது

நகை,நட்டுகள்,வெள்ளிப்பாத்திரங்கள்,என அம்மாமார்கள் சேமித்து விடுவார்கள்.

சின்ன குழந்தையாக இருக்கும்போதே சேர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

பிற்காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும் அல்லவா?

பின்  மூவாயிரம்போல் பணமிருந்தாலும்,கல்யாணத்தை ஒப்பேற்றி

விடுவார்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது ஜோடிஜோடியாகச்

சேர்த்த பாத்திரங்கள் இருக்கிரது.

தான் போட்டுக் கொண்டிருக்கிர நகை இருக்கிரது. இரண்டையும் இரண்டாகப்

பிரித்தாலே ஓரளவு ஒப்பேற்றி விடலாம்.

மற்றது வரன் கூடிவந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

மனதில் தீர்மானமான யோசனை.

தெரிந்தவர்கள் யாரைப் பார்த்தாலும், ஏதாவது  வரன் இருந்தா சொல்லு

இதே வாக்கியங்கள்தான்.

ஊரிலே வேம்பக்கா என்று     எல்லோராலும் கூப்பிடப்படும்  ஒரு

நடுத்தர வயது அம்மா உண்டு.

வாய் அவ்வளவு இனிமையாகப் பேசும். கையாலேயே ரவிக்கைகள்

அழகாகத் தைப்பாள்.

எல்லோருக்கும் தைத்தும் கொடுப்பாள். கூலி வாங்க மாட்டாள்.

அதற்கு மேலேயே மாங்காய்,தேங்காய், தோட்டத்து காய்கறிகள்

என சப்ளை செய்து விடுவார்கள்.

அவர்களுக்கு ஒரு பிள்ளை வாத்தியார் ட்ரெயினிங் முடித்து விட்டு

வாத்தியார் வேலை.

அவருக்குக் கிளி மாதிரி, பெண் என்பார்களே அப்படி ஒரு மனைவி.

மிக்க வெகுளியான கிராமத்துப் பெண்.

எப்படியெல்லாம்  ஆட்டிப் படைக்க முடியுமோ அவ்வளவு துன்பம்

தாயும் மகனும் கொடுத்து வந்தார்கள்.

காரணம் ரொம்ப ஸாமர்த்தியம் பெண்ணுக்கு போதாது என்று.

எவ்வளவு சீர் கொடுத்தாலும் போதாது. அந்த பெண்ணின் வழி

உறவினர்கள் யார் வந்தாலும் ஏதாகிலும் சண்டை போட்டே

அனுப்பி விடுவார்கள்.

பெண்ணை அனுப்பாது வைத்திருந்தால் போதும், தாயில்லாத

பெண்ணிற்கு நாம் செய்யும் உதவி அதுதான் என்று  பெண் வீட்டினரும்

செய்வதரியாது திகைக்கும் காலமது.

சமையலறையை விட்டு பெண்கள் வெளியே வராத காலமது.

சமையல் ஸாமான்கள்,உப்பு,சர்க்கரை,காப்பிப்பொடி, எண்ணெய்

,நெய் முதலான ஸாமான்கள் ஒருவருக்கொருவர்  அவசியமான போது

கடனாக கேட்டு வாங்கிக் கொண்டு, திருப்பிக் கொடுப்பார்கள்.

ஒரு கரண்டி கடனா கொடுங்கோ, திருப்பிக் கொடுத்தூடுவா என்று

மருமகள்களையோ,பசங்களையோ அனுப்புவார்கள். கிராமக்

கலாசாரம் அது

அம்மாதிரி வந்து கடன் கேட்க வந்து  தற்செயலாய் ஸாமான்

கிடைக்கவில்லை என்றால் போச்சு அந்தப் பெண்ணின் நிலை.

வேம்பக்கா மாட்டுப்பெண் வந்தால், வேறு யாரிடமாவது, ஸாமான்களை

வாங்கியாவது, கொடுத்து அனுப்புவார்கள்.

இல்லாவிட்டால் கடன் வாங்கி வரக்கூட துப்பில்லை என்று சாடும்

மாமியார்.

குழந்தை வேறு பிறக்கவில்லை.  கேட்கவேண்டுமா பிடுங்கல்களுக்கு!!!!!

சாந்த ஸக்குபாய் ஸினிமா வந்த புதிது.நான் கேட்டே விட்டேன்.

ஸக்குபாயை மாமியார் படுத்துவது மாதிரி நீயும் படுத்தரயே என்று.

அதையும் பெருமையாக இவ என்னை இப்படி கேக்கறா,ஸக்குபாய்

எங்கே, இவளெங்கே  நான் அப்படியா இருக்கேன். சுத்த அசடு இது.

கேட்கிறவர்கள், அவ உங்களைக் கேட்கக் கூடாதுதான்.என்பார்கள்.

நன்றாகக் கேட்டாய். அதுவும் உறைக்கலே, அதையும்,பெருமையா

சொல்லிக்கிறா என்று பின்னால் சொல்லுவார்கள்.

அந்தப் பெண்ணிற்கும் ஒரு முடிவு வந்தது.

ஏதோ கிராமத்தில் வேலை அவனுக்கு. அந்தப் பெண்ணும்

அங்கிருந்தது.

ஏதோ ஜுரம். ஸரியாக டாக்டரில்லை என்று வேறு ஊரிலிருந்து

அவளை அழைத்து வந்தார்கள். ஜன்னி கண்டமாதிரி இருந்தாள்.

டாக்டர் வந்து பார்த்து வைத்தியம் செய்தார்கள்.

இரண்டொரு நாளில்  நாட்டுப்பெண் போய்விட்டாள்.

ஊரில் இருப்பவர்கள் அந்த பெண் ஏதோ அடி வாங்கி, எக்கு தப்பாக

பட்டிருக்கும். அதான் இப்படி போய்விட்டது என்று பேசிக் கொண்டார்கள்.

ஏதாகிலும் கோபத்தில் அடித்து இம்மாதிரி ஆகி விட்டதென ஊரில்

ஸந்தேகம்.

எதற்கு இந்த கதை?

காரணமில்லாமலா?

ஆக  பெரியம்மா அத்தையிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

இரண்டு இடம் இருக்கு. ஒன்று உன் பேரன். மற்றது இந்த ஊரே.

எதையாவது பார்த்து பேசி முடித்து விட்டு அக்கடா என்று இருக்காமல்

எங்கேயோ அலைஞ்சிண்டு இருக்காளே உன் பெண்.

சொல்லக்கூடாதா நீ.

உள்ளூர் ஸம்பந்தமே வேண்டாம். தினம் தினம் பார்த்து மருகணும்.

அவா பெண்ணுக்கு அவா என்ன செய்யராளோ செய்யட்டுமே.

நல்லதெல்லாம் தெரியாது உங்களுக்கு.

சென்னை வரனுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்யுங்களெனக் கடிதம்.

நாங்களே  சென்னை வருகிறோம்.. பதிலெழுதியாகி விட்டது.

மாமாவாத்திற்குப் போய், அவ்விடமிருந்து   அவர்களை அழைக்க

முடிவாகி விட்டது.

திருவல்லிக்கேணி மாமா வீடு. அவர்கள் மாம்பலம்.

நான்குபேர் வந்து போக அவர்களுக்கு பத்துரூபாய் அட்வான்ஸாகவே

பொதுவான ஆஸாமி வாங்கிக் கொடுத்து விட்டார்.

பிள்ளைக்கு அம்மா இல்லை.  வயது கொஞ்சம் அதிகமோ,பார்க்கத்

தெரியவில்லை.

விசாரித்ததில் அவர்களின் உறவுக்காரர்களிடம், முன்பே எங்கள்

உறவுக்காரர்கள் ஸம்பந்தம் செய்திருக்கிரார்கள்.

இதெல்லாம் போதாதா தகுதிக்கு?

பிள்ளை படித்து உத்தியோகம் செய்கிரான்.

அவர்களுக்கு குடும்பத்தை ஸரிவர  கவனிக்கும் குடும்பப் பெண் தேவை.

பெண் பார்க்கும் படலம் முடிந்து அவர்கள்  பச்சைகொடி காட்டி விட்டார்கள்.

காங்கிரஸ் அபிமானிகள்.   எல்லா சிலவும் நம்மது,இரண்டு திருமங்கல்யம்

உட்பட யாவும்,தவிர அவர்களுக்காக போக்குவரவு சிலவு,வேஷ்டி

வகைகளுக்காக. கதராடை உடுத்துபவர்கள்.

மாமா இதெல்லாம் நீயே பார்த்துச் செய்வது. உங்காத்துக்காரருக்கு

நீதான் சொல்ல வேண்டும். நாங்கள் எதற்கும் பொருப்பில்லை என்று

சொல்லி விட்டார் அம்மாவிடம். அம்மாவிற்கு யோசனையானாலும்

செய்தே தீருவதென்று.

நகைகளை அழித்து இரண்டு பிரிவாக மாற்றிக் கொண்டும் வந்தாகி

விட்டது.

அவர்களுக்கு அப்பாவைக் கலந்து பேசி திரும்ப வந்து நிச்சயம் செய்வதாகக்

கூறி ஊருக்கும் வந்சாச்சு.

பலத்த வாக்குவாதங்களுக்குப்  பின்னால்தான், அப்பா என்ன வேண்டுமோ

செய்து கொள் என்று சொன்னார்.

யுத்த காலத்து சம்பளப்பிடிப்பை டேனிஷ் மிஷின் கொடுப்பதாகச் சொல்லவே

அது வொரு ஆயிரம் ரூபாய் வந்தது.

மேலும் பிதுர்ராஜ்ஜியம் விற்றும் பணம் தருவதாகச் சொன்னார்.

ஓரளவு பணம் போதும்.

எல்லாம் உங்கள் மனிதர்களைக் கொண்டே செய்து கொள். எனக்கு

மனது இன்னும் பண்படவில்லை என்றும் தீர்மானமாகக் கூறிவிடவே

என்ன செய்வது?ஏது செய்வது புதியதாகப் பிரச்சினைகள் ஆரம்பம்.

காங்கிரஸ் அபிமானியாக இருந்து, எதிராக மாரியவர் அப்பா.கதர்

வேஷ்டி பிரச்சினை ஆயிற்று. எப்படி?

அடுத்து பார்க்கலாம்.  வருகிறேன்.

Entry filed under: அன்னையர் தினம்.

பொங்கல் வாழ்த்துகள் க்வாக்கமோலே guacamole.—அவகேடோவின் ருசி.

22 பின்னூட்டங்கள் Add your own

  • 1. chitrasundars blog  |  11:24 பிப இல் ஜனவரி 22, 2014

    மீண்டும் நினைவுவைத்து வேளைக்கீரையைப் பற்றி விளக்கம் அளித்தது மகிழ்ச்சிமா. ‘வேளை கூடி வந்தால் தானாக எல்லாமும் கூடி வந்துவிடும்’ என்பது ஒருவேளை இந்தக்கீரையை வைத்துதான் சொல்லியிருப்பாங்களோ! தன‌க்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் பிள்ளைகளுக்குக் கொடுப்பதால்தான் தாய். பாவம், அந்த மாட்டுப்பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கை அமைகிற‌தோ என எண்ணும்போதே இப்படியாகிவிட்டதே.

    மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்க வருவதற்கும் நாம்தான் பணம் தரவேண்டுமா? ‘பிதுர்ராஜ்ஜியம்’ என்பது என்னன்னு சொல்லுங்கோ. அடுத்த பதிவுக்கு இப்போதே துண்டுபோட்டு இடம் பிடிச்சிட்டேன். அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 2. chollukireen  |  11:03 முப இல் ஜனவரி 24, 2014

      அப்பா,தாத்தா,அப்பாக்குதாத்தா,தாத்தாக்குதாத்தா
      இப்படி மூதாதையர்கள், வழி வரும் ஸொத்துக்களுக்கு
      பிதுர் ராஜ்ஜிய ஸொத்து என்பார்கள். இதில் முன்பெல்லாம் பெண்களுக்கு உரிமை கிடையாது.
      பிள்ளைகளுக்கு உரிமையானது. சில ஷரத்துகளுடன்
      பிள்ளைகள் வி.ற்கலாம். இன்னும் கூட
      விஷயங்கள் இருக்கும்..

      வெளி ஊரிலிருந்து வருபவர்கள், புதிய ஸம்பந்தம், இப்படி அயலார்கள் ,பெண்பார்க்க வரும் போது, சிலவுக்கு கொடுப்பதும்,வாங்கிக் கொள்வதும், ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருந்தது..
      எத்தனை பெண்களை சிலவழித்துப் பார்க்க முடியும்.?
      உள்ளூர் இல்லாவிட்டால் இப்படியும் யிருக்கும்.
      இதெல்லாம் புதியதில்லை. அன்புடன்

      மறுமொழி
  • 3. திண்டுக்கல் தனபாலன்  |  4:47 முப இல் ஜனவரி 23, 2014

    அந்த மாட்டுப்பெண்னின் நிலை வருத்தம் தருகிறது…

    மறுமொழி
    • 4. chollukireen  |  11:08 முப இல் ஜனவரி 24, 2014

      ஆமாம் அவள் கதை மனது கஷ்டமானது.. அதனால் வளர்த்தவில்லை..போதும் என்று அனுப்பி விட்டேன்.
      பாவம். அன்புடன்

      மறுமொழி
  • 5. adhi venkat  |  2:07 பிப இல் ஜனவரி 23, 2014

    ஒரு பெண்ணுக்கு கல்யாணம் ஆகறதுக்குள் எத்தனை போராட்டங்கள்… வேளைக்கீரை சொன்னது குறித்து சந்தோஷம் அம்மா…

    துணி போட்டு பாத்திரம் வாங்குதல்… சிறுவயது முதலே கல்யாணத்துக்காக சேமிப்பது…அடடா! அம்மாக்களே இப்படித் தான்.. எனக்கு கல்யாணம் நிச்சயம் செய்வதற்குள் அத்தனையும் ரெடியாக இருந்தது…:))

    தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் குழந்தைகளை எண்ணியே வாழ்க்கை…

    மறுமொழி
    • 6. chollukireen  |  11:19 முப இல் ஜனவரி 24, 2014

      இந்த நாளில் படிப்பைக் கொடுத்து, அயல் நாட்டுக்கு அனுப்புவதால்,பாத்திரம் சேமிப்பதில்லை. பெண்களுக்கு படிப்பும், வேலையும் இருந்தால் போதும்.
      காலம் மாறுவதுபோல் பாத்திரங்களும் எவ்வெப்படியோ மாறிக்கொண்டு வருகிறது.
      இன்னும் என்ன வெல்லாம் மாறுமோ?தெரியாது.
      ஆனால் தாய்,பெண் என்ற பாசம் மட்டிலும் இன்னும் மெருகேறி வருகிறது. அது போதும்.
      வேளைக்கீரை கூட அர்த்தமுள்ளதாக அப்போது இருந்தது.
      உன் பின்னூட்டம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது.
      ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 7. வை. கோபாலகிருஷ்ணன்  |  4:20 பிப இல் ஜனவரி 31, 2014

    //குழந்தை வேறு பிறக்கவில்லை. கேட்கவேண்டுமா பிடுங்கல்களுக்கு!!!!!

    சாந்த ஸக்குபாய் ஸினிமா வந்த புதிது.நான் கேட்டே விட்டேன்.

    ஸக்குபாயை மாமியார் படுத்துவது மாதிரி நீயும் படுத்தரயே என்று.//

    அந்த நாட்களில் பெண்களின் நிலை படிக்கவே மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. நன்றாக எழுதியுள்ளீர்கள். ஒருசில பிரச்சனைகளால் என் வருகையிலும் தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் படிக்க முடிந்தது.

    மறுமொழி
    • 8. chollukireen  |  11:22 முப இல் ஏப்ரல் 4, 2021

      நானும் பதில்போட மறந்துக்கிறேன் போல உள்ளது. மன்னிக்கவும். அன்புடன்

      மறுமொழி
  • 9. chollukireen  |  11:12 முப இல் ஏப்ரல் 5, 2021

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    வேளைக்கீரை மகிமையோ என்னவோ? எப்படிப்பட்ட இடங்கள், எந்தமாதிரி காலம், என்ன தேர்வு? வாருங்கள். அன்புடன்

    மறுமொழி
  • 10. ஸ்ரீராம்  |  1:39 பிப இல் ஏப்ரல் 5, 2021

    வேளையைக்கொண்டு வரும் வேளைக்கீரை!  அட!  

    பெண் பிறந்த காலம் தொட்டே அம்மாமார்கள் சேமிக்கத்தொடங்கினால் சிறப்பு.  எங்கே, சிலபேர் அதிலும் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

    மறுமொழி
    • 11. நெல்லைத்தமிழன்  |  8:50 பிப இல் ஏப்ரல் 5, 2021

      இந்தக் காலம், அது அப்பாவின் பொறுப்பு இல்லையோ? அந்தக் காலத்தில் வேலைக்கு என்று செல்பவர்கள் குறைவு, எல்லாம் நில வேலைகள்தான்.

      மறுமொழி
      • 12. chollukireen  |  11:25 முப இல் ஏப்ரல் 6, 2021

        இது ஒரு வயதான அப்பாவின் கதையல்லவா. பொருப்பு அப்பாவினுடயது என்றாலும் சிலஸமயங்கள் இம்மாதிரியும் நடந்தது. வசதிக் குறைவு. வேலைக்குச் செல்பவர்கள் உயர்வு என்ற மனப்பான்மையும்தான். நன்றி. அன்புடன்

    • 13. chollukireen  |  11:13 முப இல் ஏப்ரல் 6, 2021

      பணமாக இல்லாவிட்டாலும், நகைகளாகவோ,பாத்திரம் பண்டங்களாகவோ சேமித்துக் கொண்டுதான் இருந்தார்கள். என்ன அஸௌகரியங்களோ சிலபேருக்கு. இப்போது அவைகளெல்லாம் தேவை இல்லை.ஸரஸ்வதி இருந்தால்ப் போதும். லக்ஷ்மி தானாகவே வந்து விடுவாள். நன்றி. அன்புடன்

      மறுமொழி
    • 14. chollukireen  |  11:06 முப இல் ஏப்ரல் 7, 2021

      உங்களுக்கான மறு மொழி இடம்மாறி விட்டது. நெல்லைத்தமிழரின் பதிலுக்கு அடுத்தது.அன்புடன்

      மறுமொழி
  • 15. நெல்லைத்தமிழன்  |  3:18 பிப இல் ஏப்ரல் 5, 2021

    அந்தக் காலம்…. நிலைமைகள் மோசமாகத்தான் இருந்ததோ?

    //உள்ளூர் ஸம்பந்தமே வேண்டாம். தினம் தினம் பார்த்து மருகணும்// – பாவம்…

    வந்த பெண்ணை இவ்வளவா கொடுமைப்படுத்துவார்கள்? அவள் போனபிறகு இவர்கள் என்ன செய்வார்கள் (வயதான காலத்தில்?)

    மறுமொழி
  • 16. chollukireen  |  11:18 முப இல் ஏப்ரல் 6, 2021

    இதெல்லாம் வசதி குறைந்தவர்களின் கதைதானே. பெண்டாட்டி போய்விட்டால் புது மாப்பிள்ளைதானே அந்தக் காலங்களில். அன்புடன்

    மறுமொழி
  • 17. athiramiya  |  7:37 பிப இல் ஏப்ரல் 6, 2021

    நான் இதை இப்போதான் படிக்கிறேன் காமாட்சி அம்மா.. நலம்தானே நீங்கள்…

    அந்தக்காலம் பெண்கொடுமை அதிகம்தான்.. அதுவும் தமிழ் நாட்டில் கொஞ்சம் கூட அதிகம்.

    எங்களிடத்தில் பெண்ணுக்கு வீடு, காணி தான் சீதனம், பாத்திரம் சேர்ப்பது என்பது இல்லை.. நகை கேட்க மாட்டினம், அது பெண் வீட்டார் விருப்பம். ஆனா பணம் கேட்பினம், அதனால பெண் பிள்ளை எனில் பணம் தான் சேர்ப்பார்கள்.

    ஆனா இப்போ அதுவும் இல்லை, சீதனம் என்பது இல்லை என்றாகிவிட்டது, முக்கியமாக எல்லோரும் வெளிநாடுகளில் இருப்பதால், சீதனம் கேட்பது கெளரவக் குறைவு என்றாகி விட்டது, ஊரில சிலர் வாங்குகின்றனர்தான் ஆனா கொடுமையாக இல்லை எனலாம்.

    கதையில் சொன்ன அழகிய கிளி போன்ற பெண் பாவம்….

    மறுமொழி
    • 18. chollukireen  |  11:22 முப இல் ஏப்ரல் 7, 2021

      எங்கே காணோமே என்று நினைத்தேன். உங்கள் நாட்டு வழக்கம் பரவாயில்லை. அங்கும் பணம் வேண்டுமே! இப்போ இங்கும் கேட்பதில்லை. தவணை முறையில் ஸம்பாதிக்கும் பெண்கள்தானே இப்போது. இப்போது பெண் கிடைக்கவில்லை என்ற கதைதான் நடந்து கொண்டு இருக்கிரது .ஏதோ ஒரு விதத்தில் ஒரு பிரிவினருக்குக் கஷ்டம். மறுமொழி களைகட்டி விட்டது. உங்கள்நாட்டு விவாகமுறை. கலந்து கட்டியாக விவகாரங்கள் எல்லாக் காலத்திலுமுள்ளது. ஆமாம் கிளிபோன்ற பெண் என்ன செய்ய முடிந்தது? நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 19. Geetha Sambasivam  |  10:06 முப இல் ஏப்ரல் 7, 2021

    பெண்ணை இதை விட மோசமாகவும் கொடுமைப் படுத்துவார்கள். நெல்லைத்தமிழருக்கு அதெல்லாம் தெரியலை/புரியலை. அந்தப் பெண் போயிற்றோ, பிழைத்தது. இரண்டாம் தாரமும் மாட்டிக் கொண்டால் கஷ்டம் தான்! 😦

    மறுமொழி
    • 20. chollukireen  |  11:37 முப இல் ஏப்ரல் 7, 2021

      கொடூரமான கதைகளெல்லாம் கேள்விப் பட்டிருக்கிரோம். பார்த்ததைவிட படித்த கதைகளும் இப்படியே. அந்தப் பெண்கூட அதன் முடிவு , உண்மை என்னவோ? தோசை வார்க்கத் தெரியவில்லை என்று கையையே கல்லில் தேய்த்து விட்டாள் என்று வேறு ஒரு மாமியாரின் கதை. கொடூரமான கதைகள் சொல்லி யாவும் சிறுவயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற படிப்பினையும் கூட வரும் பெண் குழந்தைகளுக்கு. இப்படியாகத்தானே—— அன்புடன்

      மறுமொழி
  • 21. Geetha Sambasivam  |  10:07 முப இல் ஏப்ரல் 7, 2021

    சென்னை மாப்பிள்ளை தான் கல்யாணம் செய்துக்கப் போறாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

    மறுமொழி
    • 22. chollukireen  |  11:42 முப இல் ஏப்ரல் 7, 2021

      அதற்குள்ளாகவே நீங்கள் வரக்காணோமே என்று தோன்றியது. பார்த்த பிறகுதான் ஸரி என்று தோன்றியது . அன்புடன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஜனவரி 2014
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,500 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: