சோலே[செனாமஸாலா]
பிப்ரவரி 8, 2015 at 8:07 முப 4 பின்னூட்டங்கள்
இது 2010 இல் ஜெனிவாவிலிருந்த போது பதிவிட்டது. இதை கெட்டியாகவும்,சற்று நீர்க்கவும் தயாரிக்கலாம். மஸாலா அதிகம் வேண்டாதவர்கள் குறைவாகப் போடவும்.
சாதத்துடன் சாப்பிட சற்று நீர்க்க வைக்கவும். ஆலு டிக்கி
எழுத நினைத்தேன். அத்துடன் சோலே,புளிப்பச்சடி,தயிர்
முதலானது சேர்த்துத் தருவார்கள். அதற்கான முன்னோட்டமிது. படியுங்கள். டிக்கி அடுத்து எழுதுகிறேன்.
அன்புடன்
வேண்டியவைகள்
வெள்ளை கொண்டைக் கடலை—-2கப்காபூலிச்செனா]
அரைக்க.வெங்காயம்—-பெறியதாகஒன்று
பூண்டு—-4 இதழ்கள்
இஞ்சி–அரை அங்குலத் துண்டு
தக்காளி–பெறியதாக 1
வேண்டிய பொடிகள்—தனியாப்பொடி–2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன்
மஞ்சள்பொடி–அரை டீஸ்பூன்
ஏலப்பொடி–சிறிது
பொடிக்க-லவங்கம்–8
மிளகு—1 டீஸ்பூன்
பட்டை—சிறு துண்டு
தாளிக்க,எண்ணெய்—-4டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை–1
ருசிக்கு—உப்பு
கெட்டியாகக் கரைத்த புளி ஜலம்—-3 டேபிள்ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—–சிறிதளவு
செய்முறை.—-கடலையை 5, 6,மணிநேரத்திற்குக் குறையாமல்
தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
கேஸ்ரோலில் சூடான தண்ணீர் விட்டு கடலையைப் போட்டு மூடி-
-வைத்து ஊறவைத்தால் அவசர சமயங்களில் சீக்கிரமாகவே
ஊறும்.
தக்காளியைத் தனியாகவும், பூண்டு,வெங்காயம்,இஞ்சி இவைகளைச்
சேர்த்துத் தனியாகவும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
பட்டை,லவங்கம், மிளகு இவைகளைப் பொடிக்கவும்.
ஊறவைத்த கடலையை நான்கு கப் ஜலம் சேர்த்து ப்ரஷர்
குக்கரில் நன்றாக வேகவைக்கவும். இரண்டு மூன்று விஸில்
வந்த பிறகு ஸிம்மில் வைத்து 4 ,அல்லது 5 நிமிஷங்கள்வைத்து
இறக்கவும்.
சற்று பெறிய வாணலியிலோ, அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்திலோ
எண்ணெயைக் காய வைத்து, அரைத்த வெங்காய இஞ்சி,பூண்டு
விழுதைச் சேர்த்து நிதான தீயில் நன்றாக க் கிளறிக் கொடுத்து
வதக்கவும்.
எண்ணெய் பிறிந்து வருமளவிற்கு வதக்கி எல்லாப் பொடிகளையும்
சேர்த்துக் கிளறி, தக்காளி விழுதைச் சேர்த்துத் திரும்பவும்
வதக்கவும். எண்ணெய் போதாவிட்டால் சிறிது விடவும்.
மஸாலா சேர்ந்து வரும்போது, பிரிஞ்சி இலையைச் சேர்த்து
வெந்த கடலையையும் , ஜலத்துடனேயே சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்பு, கடலையை வேக…
View original post 64 more words
Entry filed under: வட இந்திய சமையல்கள். Tags: காபூலி செனா, மஸாலா.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
adhi venkat | 6:29 முப இல் பிப்ரவரி 19, 2015
சோலே தில்லியில் இருந்தவரை அடிக்கடி செய்வேன். தங்கள் விவரிப்பில் சுவையாக இருந்தது அம்மா.
2.
chollukireen | 2:49 பிப இல் பிப்ரவரி 21, 2015
பெண் வீடு தவிர மற்ற இடங்களில் இது அடிக்கடி செய்யப் படுகிறது. சோலே மஶாலா சேர்த்து வெங்காய,பூண்டு இஞ்சி அரைத்து என அங்கங்கு சிறிய மாறுதல்கள் இருக்கிறது. புளியையும், டீப்பொடியையும் சிறிது வேகும் போது துணியில் கட்டிப்போட்டு செய்பவர்களும் இருக்கிரார்கள்.பலவிதத்திலொரு விதமிது. அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 9:40 முப இல் மார்ச் 2, 2015
ஏதோ புதிய பெயருடன் ஓர் பதார்த்தம். படிக்கவே சுவையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
4.
chollukireen | 7:54 முப இல் மார்ச் 3, 2015
உங்கள் பிள்ளை நாட்டுப்பெண்களைக் கேட்டுப் பாருங்கள். தெரிந்திருக்கும். நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு. அன்புடன்