மூலிகைப்பொடி.

ஏப்ரல் 15, 2015 at 8:49 முப 22 பின்னூட்டங்கள்

மூலிகை மிக்ஸ்

மூலிகை மிக்ஸ்

பச்சென்று பார்க்க அழகாகவும், வாய்க்கு ருசியாகவும் அமைந்த பொடி

இது. செய்வதும் ஸுலபம்தான். மனம் விரும்பிச் செய்தால் ஒரு

நிமிஷத்தில் செய்து விடலாம்.

கறிவேப்பிலை, புதினா,   சில எலுமிச்சை இலைகள் நல்ல வாஸனை

ஆன ஸாமான்களாதலால்  இன்னும் ஸாமான்களுடன்  மிக்க நன்றாக

அமைந்தது.

மோர்க்குழம்பு, பச்சடி,வற்றக்குழம்பு என சற்றுப்  புளிப்பு ருசியுடன் கூடிய

வகைகளைத் தொட்டுக்கொண்டு சாப்பிட கூடுதல் ருசி வரும்.

சாப்பிட நேர்த்தியாக உள்ளது.

சென்னையில்  கறிவேப்பிலை  ஒருநாள் அதிகம் கிடைத்தது.

புதினாவும் அதிகப்படி இருந்ததைக் காயவைத்திருந்தேன் முதல் நாள்.

காய்ந்த புதினா, பச்சை கறிவேப்பிலை

காய்ந்த புதினா, பச்சை கறிவேப்பிலை

மாதிரி வறுக்காத ஸாமான்கள்

மாதிரி வறுக்காத ஸாமான்கள்

இந்த மூலிகைப்பொடியைச் செய்தேன்.  ருசியும் பார்த்தேன்

நீங்களும் செய்து பார்க்கலாமே என போட்டோவும் எடுத்தேன்.

எதைச் செய்யலாம்,எதை எழுதலாம் என்ற எண்ணம் ஸொந்த வலைப்பூ

வைத்திருப்பதால் அதிகம் தோன்றுகிறது.

ஸமயத்தில் இது ஒரு தொத்து வியாதி போலக்கூடத் தோன்றுகிறது.

பார்ப்போம். இதுவும் எவ்வளவு தூரம் போகிறதென்று.

ஸரி ஸாமான்களைப் பாருங்கள்.

வேண்டியவைகள்.

பச்சை கறிவேப்பிலை—இரண்டுகப்.

புதினா இலை காயவைத்தது—அரைகப்,அல்லது இருப்பதைப் போடவும்.

எலுமிச்சை,அல்லது நாரத்தை இலை—5 அல்லது 6. இல்லாமலும்

செய்யலாம்.

கடலைப் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்

துவரம்பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்

எள்–ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகு,சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்

காய்ந்தமிளகாய் குண்டுவகை—-4

புளி—சிறிது

உப்பு,பெருங்காயம்—-ருசிக்கு

செய்முறை.

கறிவேப்பிலையை அலம்பி ஈரமில்லாமல் துண்டில் பரப்பி ஈரம்

உலரவிடவும்.

அடுப்பில் வாணலியைக் காயவைத்து,  பருப்புக்களைத்  தனித்தனியாக

வெரும் வாணலியில் சிவக்க வறுத்தெடுக்கவும்.

மிளகு எள்ளையும், தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.

இந்தக் குண்டு மிளகாய்களைப் பருப்புடன் சேர்த்தே வறுக்கலாம்.

உப்பையும் லேசாக வறுக்கவும்.

புளியையும்  பிய்த்துப்போட்டு சூடாக்கவும்.

எல்லாவற்றையும் வறுத்த வாணலி நல்ல சூட்டுடன் இருக்கும்.

ஒரு கால் ஸ்பூன் எண்ணெயை விட்டு, கறிவேப்பிலையை வறுக்கவும்.

எலுமிச்சை இலையையும்,நரம்புகள் நீக்கி வறுக்கவும்.

இறக்கி அப்படியே வாணலியில் வைக்கவும்.

இலைகள் நமுக்காமல் இருக்கும்.

மிக்ஸியில் பருப்புகளை மிளகாய்,மிளகு சேர்த்துப் பொடிக்கவும்.

ரவை பதமாக இருக்கும்போது,எள் சீரகம்,புளியைச் சேர்த்து, மேலும்

சற்று பொடிக்கவும்.

உப்பு,வறுத்த இலைகள்,புதினா இவைகளைச் சேர்த்து மேலும் சற்று

அரைத்து பெருங்காயப் பொடி சேர்த்துப் பத்திரப் படுத்தவும்.

மிக்க நைஸாக அரைக்க வேண்டாம்.

உதிராக வடித்த சாதத்துடன்  சிறிது இக்கலவை சேர்த்து,எண்ணெயும்

நெய்யுமாகக் கலந்து தாளித்துக் கொட்டி  சித்ரான்னம் மாதிரியும்

செய்யலாம்.

வீட்டில் செய்யும்  சேவையிலும்  இதை ஒருக்கலவையாகச் செய்ய

முடியும். செய்து பாருங்கள்.

காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து  வேண்டும்போது உபயோகிக்கலாம்.

Entry filed under: பொடிவகைகள்.

வாழ்த்துகள் அறிவு கெட்ட ஆச்சாமரம்.

22 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  9:38 முப இல் ஏப்ரல் 15, 2015

    அருமையான ருசியான மூலிகைப்பொடி. நார்த்த இலை நல்ல மணமாக இருக்கும். இதை வேப்பிலைக்கட்டி என்று சொல்லுவோம். ஆஹா, அது எவ்வளவு ஜோராக இருக்கும். அதுபோலவே தாங்கள் சொல்லியுள்ள இதுவும் இருக்கும் என நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  5:15 முப இல் ஏப்ரல் 16, 2015

      நாரத்த இலையோ,எலுமிச்சை இலையோ சேர்த்துச் செய்யும் வேப்பிலைக்கட்டி முன்பு எழுதியிருக்கிறேன்.
      இது வீட்டில் அதிகமாக இருந்தவைகளைச் சேர்த்துச்செய்தது. எலுமிச்சை இலையும் சேர்த்திருந்தால் இன்னும் மணமாக இருக்கும் என்று தோன்றியது. இது என்ன கறிவேப்பிலையும்,புதினாவும்
      சேர்த்துச் செய்தது என்றுதான் தோன்றும்.
      இருப்பினும் பருப்புப் பொடிபோல செய்யவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.
      காமா சோமா என்று இல்லை. அக்கரையாகச் செய்தேன். நன்றாக அமைந்தது. உங்கள் பின்னூட்டம்
      இன்னும் இதைப் பற்றி வர்ணிக்கத் தோன்றியது.
      நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 3. Kumar  |  9:47 முப இல் ஏப்ரல் 15, 2015

    Neengal cheythatai ruchithu parthom
    Migavum nanraga irunthathu

    மறுமொழி
    • 4. chollukireen  |  5:18 முப இல் ஏப்ரல் 16, 2015

      ருசித்து நன்றாக உள்ளது என்று எழுதியது மற்றவர்களுக்கு நாமும் செய்யலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கும். மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 5. yarlpavanan  |  5:00 பிப இல் ஏப்ரல் 15, 2015

    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    மறுமொழி
    • 6. chollukireen  |  5:19 முப இல் ஏப்ரல் 16, 2015

      சாப்பிடுவதற்கு வயணமாக இருக்க வேண்டுமே. மிக்க நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 7. திண்டுக்கல் தனபாலன்  |  2:35 முப இல் ஏப்ரல் 16, 2015

    இன்றே செய்து பார்க்கிறோம்… நன்றி அம்மா…

    மறுமொழி
  • 8. chollukireen  |  5:20 முப இல் ஏப்ரல் 16, 2015

    இன்றே செய்தல். நன்றாய் அமையும். நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 9. Jayanthi Sridharan  |  2:22 பிப இல் ஏப்ரல் 16, 2015

    Nice innovative recipe mami. Thanks for sharing.
    shall try at the earliest opportunity.

    மறுமொழி
  • 10. adhi venkat  |  7:03 முப இல் ஏப்ரல் 17, 2015

    படங்களும், தாங்கள் சொல்லிய விதமும் ஜோரா இருக்கும்மா. கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

    மறுமொழி
  • 12. chollukireen  |  11:22 முப இல் ஜூலை 4, 2022

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    மூலிகைப்பொடி. மலைக்காதீர்கள். சித்ரகூடம் போகவேண்டாம். வீட்டு மூலிகைகள்தான்.சற்று அக்கரையாகச் செய்தேன். மிகவும் ருசியாக வந்தது. இதுவும் மீள் பதிவுதான். பாருங்கள் அன்புடன்

    மறுமொழி
  • 13. நெல்லைத்தமிழன்  |  3:01 பிப இல் ஜூலை 4, 2022

    அட…இது புதினா எலுமிச்சை இலை சேர்ந்த புதிய கலவையாக இருக்கிறதே… உடலுக்கும் நல்லது. நல்ல செய்முறைக் குறிப்பு

    மறுமொழி
    • 14. chollukireen  |  10:59 முப இல் ஜூலை 5, 2022

      மிக்கநன்றி. முடிந்தவர்கள் செய்து ருசிக்கலாம். ஸமயங்களில் உபயோகமாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். அன்புடன்

      மறுமொழி
  • 15. ஸ்ரீராம்  |  12:20 முப இல் ஜூலை 5, 2022

    புதினாவை காயவைத்து பாதுகாக்கலாம் என்பது புதிய செய்தி.  நாரத்தை அல்லது எலுமிச்சை இலைகள் நினைத்தபோது கிடைத்தால் இணைக்கலாம்.  ருசிதான்.  நன்றி அம்மா.

    மறுமொழி
    • 16. chollukireen  |  11:05 முப இல் ஜூலை 5, 2022

      புதினா கிடைக்காதபோது உபயோகிக்கவும் ஸௌகரியமானது. எதுவுமே கிடைத்தால்தான் ஸௌகரியம். குறிப்புகள் உபயோகமாகலாம். அதான் எழுதியிருக்கிறேன். மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 17. Geetha Sambasivam  |  12:43 முப இல் ஜூலை 5, 2022

    புதினாப்பொடி மட்டும் அடிக்கடி பண்ணி வைச்சுப்பேன். சப்பாத்திக் கூட்டுகளுக்கும் போடுவேன். மோரில் போட்டும் குடிக்கலாம். ஶ்ரீராமுக்குத் தெரியலை என்பதும் ஆச்சரியமா இருக்கு.

    மறுமொழி
    • 18. chollukireen  |  11:08 முப இல் ஜூலை 5, 2022

      இப்போது எல்லோருக்கும் ஞாபகம் வரும். புலவு வகைகளுக்கும் புதினாப்பொடி மிகவும் உபயோகம் இல்லையா?மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 19. Geetha Sambasivam  |  12:44 முப இல் ஜூலை 5, 2022

    நார்த்தை இலைப்பொடி (வேப்பிலைக்கட்டி) கறிவேப்பிலைப்பொடி அடிக்கடி பண்ணுவது தான். இந்தத் தடவை கருகப்பிலைப் பொடியுடன் அங்காயப் பொடியை மறந்து போய்ச் சேர்த்து வைச்சிருக்கேன். 🙂 பிரிக்க முடியாது. புது ருசியா இருக்கட்டும்னு விட்டுட்டேன். :)) உங்கள் செய்முறைப்படியும் ஒரு தரம் செய்யணும். இங்கே எலுமிச்சை இலை/நாரத்தை இலை கிடைப்பது தான் சிரமம்.

    மறுமொழி
    • 20. chollukireen  |  11:17 முப இல் ஜூலை 5, 2022

      ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் அதுவும் புதிய ருசிதான். ரஸித்துச் சாப்பிட மனதும் நேரமும் வேண்டும். இங்கு இந்த ஊரில்கூட தொட்டியில் எலுமிச்சை செடி இருக்கிறது.நானும் வேப்பிலைக்கட்டி பதிவு போட்டிருந்தேன். எல்லாமே கிடைக்கும்போதுதான். நீங்கள் யாவரும் இவ்வளவுதூரம் பதில் போடுவதே மிகவும் ஸந்தோஷம் எனக்கு. மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 21. Geetha Sambasivam  |  12:45 முப இல் ஜூலை 5, 2022

    வெறும் புதினாவை மட்டும் நன்கு காய வைத்துத் துளி உப்புச் சேர்த்துப் பொடித்து வைத்துக் கொண்டால் பற்களில் பிரச்னை வரும்போது பயன்படுத்தலாம். நல்ல தீர்வு கிடைக்கும்.

    மறுமொழி
    • 22. chollukireen  |  11:19 முப இல் ஜூலை 5, 2022

      கூடுதல் பயன் மிக்க நன்றி அன்புடன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஏப்ரல் 2015
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,503 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: