குள்ளர்களின் நகரம்.
மே 10, 2016 at 6:48 முப 4 பின்னூட்டங்கள்

குள்ளர்களின் நகரம்
இது என்ன புது தகவல் என்கிறீர்களா? அதிசயம், ஆனால் உண்மை என்ற தலைப்பிற்குத் தகுந்த மாதிரி ஏதாவது செய்திகள் பத்திரிக்கைகளில் பார்த்தால் அதை சேமிக்க எண்ணம் வந்து விடும்.
ஈரான் நாட்டின் , ஷாஹ்தாத் என்னும் புராதன நகரின் அருகில் உள்ள பாலை வனத்தில் இப்படி ஒரு இடம் இருக்கிறது. இதன்பெயர் மகுனிக். ஸராஸரி மனிதர்கள் வசிக்கும்படியான உயரமே இல்லாத சிறிய களிமண் வீடுகள் கொண்ட ஒரு நகரம் அளவிற்கு அமைந்திருக்கிறது. வீடுகளின் கதவுகள் நகர்த்த முடியாத களிமண்ணினால் செய்து அடைக்கப் பட்டுள்ளது. உள்ளிருந்து வெளிவரமுடியாத அளவிற்கு கதவுகள் அடைக்கப் பட்டிருக்கும் காரணம் விளங்கவில்லை.
இறந்தவர்கள் திரும்ப வரலாம் என்ற நம்பிக்கையில் அவர்களை வைத்து மூடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த இடங்களில் 1948, 1956 வருஷங்களில் அகழியல்,தொல்லியல் ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டிருக்கிரது. அப்போது பல விஷயங்கள் வெளியாயின.
கி.மு 3000,4000 ஆண்டுகளுக்கு முன்னே அவ்விடம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிரார்கள் என்று அங்கு கிடைத்த பொருட்களின் அடிப்படையில் ஊகிக்கப்படுகிறதாம். வீடுகள்,உலைகள், கூரைகள் அலமாரிகள், விவசாயத்திற்கான கருவிகள், உலோகக் கருவிகள் முதலானவற்றின் மூலம் ஆதாரங்களும் கிடைத்தது. தங்க ஆபரணங்கள், இரும்பு,பித்தளை உலோகங்களை உபயோகப் படுத்திய சான்றுகளும் கிடைத்தனவாம். இங்கு வாழ்ந்தவர்கள் உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்ந்திருக்கிரார்கள். இப்பகுதியில் மம்மி உருவங்களும் 2005 இல் கிடைத்திருக்கிறது. இதுவே குள்ளர்கள் நகரம் என்பதற்கு ஆதாரமாகவும் ஆகிறது..
பத்திரிக்கை தந்த தகவலுக்கு மிகவும் நன்றி. சித்திரக்குள்ளன் என்று கதை சொல்வார்களே அவனுடைய ஊராக இருக்குமோ?
Entry filed under: அதிசயம்.ஆனால் உண்மை.. Tags: குள்ளர்கள், மம்மி உருவங்கள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:19 பிப இல் மே 10, 2016
ரசனையான பதிவு. எனக்கும் இது போன்ற விஷயங்களைப் படிப்பதில் சுவாரஸ்யம் உண்டு.
2.
chollukireen | 6:40 முப இல் மே 12, 2016
நன்றி. அன்புடன்
3.
chitrasundar5 | 4:31 முப இல் மே 11, 2016
காமாக்ஷிமா,
இதுமாதிரியான செய்திகள் என்னையும் கவரவே செய்யும். அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 6:42 முப இல் மே 12, 2016
நான் பதிவும் செய்ய முயற்சித்து விடுகிறேன். நன்றி. அன்புடன்