கல்யாண கணேசர்.

மே 29, 2017 at 12:13 பிப 25 பின்னூட்டங்கள்

Ganesh-Chathurthi-celebrations-in-andhrapradesh (2)

 

நமக்கெல்லாம் தெரிந்து   பல கணேசர்கள் இருந்தாலும்  கல்யாண கணேசரைப் பற்றி  முதல் முதலாக  இப்பொழுது தான் நான் படித்தேன்.

தமிழ் நாட்டைப் பொருத்த வரையில்  கணேசர் கட்டை பிரம்மசாரிதான். அதே வடநாட்டில்  அவரை விவாகமானவராகத்தான்  சொல்லுவார்கள்.

ஸித்தி,புத்தி ஸமேத விக்னேசுவரர்தான்.

கைலாயகிரியில்  பார்வதி பரமேசுவரருக்கு,தன் பிள்ளைகள் இருவருக்கும் விவாகம் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதாம்.

இதனையறிந்த கணேசரும்,முருகரும் , தாய்,தந்தையரிடம் போய் தனக்கே முதலில் விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று  கேட்டுக் கொண்டனர்.

பிள்ளைகளிருவரும் போட்டி இடுவதைப் பார்த்து,இதை நல்ல முறையில்  தீர்க்கவேண்டுமென்று சிவன் விரும்பி இருக்கிறார்.

இந்த பூலோகத்தை யார் முதலில்  பிரதக்ஷிணம்  செய்து வருகிறீர்களோ, அவனுக்கு முதலில் விவாகம் என்று சொன்னார்.

முருகருக்கு ஏக குஷி.  கணேஷசருக்கு   இவ்வளவு சீக்கிரமாக உலகைச் சுற்றிவர முடியாது. நாம் வேகமாகப்போய் வந்து விடலாம் என்று மயில் வாகனத்தின் மீது அமர்ந்து உலகைச் சுற்றிவரப் போய்விட்டார்.!

கணேசருக்கோ தன்னால்  உலகைச் சுற்றிவர முடியாது. என்ன செய்யலாம் என்று ஒரு வினாடி யோசித்தார்.

மளமளவென்று   நியமத்துடன் நீராடி,நியம நிஷ்டைகளைக் கடைப் பிடித்துத், தந்தைதாய் அருகிலே வந்தார். அவர்களைப்  பார்த்து,

நீங்கள் இருவரும் இப்படி ஆஸனத்தில் வீற்றிருக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அவர்கள் முகத்தில் கேள்விக்  குறி?

பூமியைச் சுற்றிவரக் கிளம்பவில்லையா?   சீக்கிரம் கிளம்பு பணித்தனர் இருவரும்.

உங்கள் இருவரையும் ஒன்றாகப் பூஜிக்க விரும்புகிறேன்.

இருவரும் அமர்ந்தனர்

கணேசர் அவர்களிருவரையும்  பூஜித்து, வணங்கி ஏழு முறை வலம் வந்து வணங்கினார்.

தந்தையே எனக்கு மணம் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நான் சொன்னதை மறந்து விட்டாயா? சீக்கிரம் கிளம்பிப்போய் வலம் வா!

பார்வதிதேவியும்   துரிதப் படுத்தினார்.

அம்மா நான்    பூமி தேவியை வலம் வந்தாகி விட்டது.

என்ன சொல்கிராய் நீ!

ஆம் அம்மா.  ஒரு முறையில்லை.  ஏழு முறை வலம் வந்தாகி விட்டது. என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.

அதெப்படி?

திரும்பவும் வணங்கிவிட்டு,

தந்தையே வேதங்கள் கூறுவது இதுதானே?

தாய் தந்தயைரை  பூஜித்து வணங்கினால், அவன் பூமிப் பிரதக்ஷிணம் செய்த பலனைப் பெறுவான் என்று கூறவில்லையா?

வீட்டிலிருக்கும்    மாதா,பிதாவை  வணங்கினால்  ஒரு தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும் என்று  சொல்லவில்லையா?

அவர்களின்  காலை அலம்பி அந்த நீரைத்  தலையில்  தெளித்துக் கொண்டால் கங்கை நீருக்கொப்பாகும் என்றும் வேதங்கள்  சொல்லியுள்ளது உங்களுக்குத் தெரியுமே!

தங்கள் திரு முகத்திலுண்டானதுதானே வேதம். தங்களுக்குத் தெரியாததா?

கணேசரின் சாதுர்யமான,அர்த்த பூர்வமான பதிலைக் கேட்டுஸந்தோஷத்தோடு கணேசரை  அணைத்துக் கொண்டு, உன் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகின்றேன் .

நீ யாவற்றையும்   ஸரியாகத்தான் சொல்லுகிராய். ஸத்யமான வார்த்தைகள்தான்  இவைகள் என்றார் சிவன்.

யோசித்து இரண்டு பெண்களை நிச்சயித்தார்.  ஸித்தி,புத்தி என்ற இருவரும்   சதுர்முகப் ப்ரம்மா   விசுவ ரூபனின் புதல்விகள்.

தேவ,முனிவர்கள் யாவருக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது.எப்பேர்ப்பட்ட கல்யாணம். வர்ணிக்க வார்த்தைகளில்லை. பிரம்மாவின் குமாரிகளாயிற்றே!

அழகான நகரையே நிர்மாணம் செய்து  விவாஹம் நடந்திருக்கும்.

யாவரும் வந்து ஸந்தோஷமாக வாழ்த்த கணேசரின் விவாகம் ,கைலாயத்தில் கோலாகலமாக நடந்தது.

lord-ganesha-riddhi-siddhi-902x500

ஆக கணேசருக்கு விவாகம் நடந்த கதை எப்படி என்பதை சிவபுராணத்தில் இப்படி ஒருகதை  படித்துத் தெரிந்து கொண்டேன்

. உலகை வலம்செய்து விட்டு வரும்  முருகரை  நாரதர் ஸந்தித்து,  உன்னை உலகம் சுற்ற அனுப்பி விட்டு இங்கு கோலகலமாக கணேசருக்குக் கல்யாணம்  நடத்திவிட்டார் உன் தகப்பனார் என்று கலகமூட்டினார். இது ஸரியில்லை. அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பாய்நீ?    முருகருக்குக்  கோபத்தைப் பல வழிகளிலும்  தூண்டிவிட்டார் நாரதர்.

நம்மிடம் உண்மையைச் சொல்லி விட்டுப் பிறகு விவாகம் செய்திருக்கலாமே!  இப்படி எண்ணங்கள் தோன்றியது. கைலாயத்தினுள் பிரவேசிக்கவே பிடிக்கவில்லை. கட்டியுள்ள நல்ல உடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு ஒரு கோவணத்தை மட்டிலும் தரித்துக் கொண்டு,தாய்தந்தையர் முன் சென்று கோபமாக ப் பேசலுற்றார்.

என்னை ஏமாற்றிவிட்டு   கணேசருக்குக்  கல்யாணம் முடித்து விட்டீர்கள். முதலில் அவருக்குத்தான் என்று சொல்லி இருக்கலாம். எனக்கு விவாகம் எதுவும் வேண்டியதில்லை. எந்த ஆடம்பரமும் தேவையில்லை

.  நடந்த விஷயங்கள் எவ்வளவு சொன்னாலும் காதில் ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாகக்   கிிரவு்ஞ்ச    மலைக்குச் சென்று அதன்மீது அமர்ந்து விட்டார்.   அவரைப்பார்க்க தாய் தந்தையரும் அவ்விடம் விஜயம் செய்கிரார்கள் என்று கதை போய்க்கொண்டு இருக்கிறது.

மாம்பழத்திற்காக  மயிலேறி உலகத்தை சுற்றிலும் கிடைக்காமல் ஆண்டிவேடம் பூண்ட கதை  யாவருக்கும் தெரியும்.

இப்படியும் பிள்ளையாரின் விவாகத்தோடும் பின்னிப் பிணைந்த கதை இது. நான் ரஸித்ததை எழுதியிருக்கிறேன்.    எவ்வளவோ பேருக்குத் தெரிந்த கதையாகவும் இருக்கலாம். பாருங்கள்.

பட உதவி—-இணையம்.

Entry filed under: விசேஷமான கட்டுரை.

யானை எப்பொழுது வந்தது ரஷ்யாவிற்கு. வெந்தய பருப்புக் குழம்பு.

25 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  12:31 பிப இல் மே 29, 2017

    புதுமையாக தங்கள் மூலம் முதன்முதலாகக் கேட்கும் இந்தக்கதையும் மிகவும் அருமையாகவே உள்ளது.

    படங்கள் எல்லாம் அழகோ அழகு.

    கல்யாண கணேசர் என்ற தலைப்பும் ஜோர் ஜோர் !

    பகிர்வுக்கு நன்றிகள்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  3:12 பிப இல் மே 30, 2017

      நானும் புதுமையாக இருப்பதைப் படித்ததும் எழுதத் தோன்றியது. எல்லாம் புராணங்களில் சொல்லப்பட்டது. பாராட்டி எழுதியுள்ளதற்கு மிகவும் நன்றி. கல்யாண கணேசரேதான். அன்புடன்

      மறுமொழி
  • 3. ஸ்ரீராம்  |  1:44 பிப இல் மே 29, 2017

    மாம்பழம் என்பது கல்யாணம் என்று மாறிவிட்டதோ! ரசிக்கும்படியான கதை.

    மறுமொழி
    • 4. chollukireen  |  3:17 பிப இல் மே 30, 2017

      ரஸித்து படிக்கும்படி இருந்தது. அதான் எழுதினேன். புராணக்கதைகள், இப்படி மாறுதல்களாக இருக்குமோ என்னவோ? மிகவும் நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 5. முனைவர் பா. ஜம்புலிங்கம்  |  1:14 முப இல் மே 30, 2017

    இப்ப்டியும் ஒரு கதை உள்ளதோ?

    மறுமொழி
    • 6. chollukireen  |  4:35 பிப இல் மே 30, 2017

      சிவபுராணத்தில் இவ்வாறாகக் கூரப்பட்டுள்ளதைப் படித்தேன். அதனால்தான் எழுத முடிந்தது. நன்றி உங்களின் வினாவிற்கு. அன்புடன்

      மறுமொழி
  • 7. Geetha Sambasivam  |  1:24 முப இல் மே 30, 2017

    மாம்பழக் கதை தான் தெரியும். இந்தக் கதையும் அருமை அம்மா. பகிர்வுக்கு நன்றி.

    மறுமொழி
    • 8. chollukireen  |  4:41 பிப இல் மே 30, 2017

      இதுவும் புராணக்கதை ஆதலால் படித்தவர்கள் அநேகம் பேர் இருப்பார்கள். ரஸித்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 9. நெல்லைத்தமிழன்  |  8:04 முப இல் மே 30, 2017

    ஓ.. அதுனாலதான, அண்ணனுக்கு ரெண்டுன்னா, உனக்கும் ரெண்டுன்னு, வள்ளி தெய்வானை?

    மாம்பழம் கதையின் தீம் தான் இதுக்கும். நல்லாத்தான் இருக்கு.

    மறுமொழி
    • 10. chollukireen  |  4:50 பிப இல் மே 30, 2017

      கணேசருக்கு அரேஞ்ஜ் மேரேஜ். வள்ளிதெய்வானையுடயது எந்தமாதிரி? நல்லாத்தான் இருக்கு என்று
      . எழுதியதற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 11. angelin  |  8:32 முப இல் மே 30, 2017

    இவ்ளோ நாளும் அம்மா மாதிரி பொண்ணு கிடைக்காம கணேஷ் ஜி கல்யாணம் செய்லைன்னு நினைச்சிட்டிருந்தேனே 🙂 ரெண்டு மனைவியர் அதுவும் அழகான தேவதைகள் மாதிரி இருக்காங்க ..பகிர்வுக்கு நன்றி காமாட்சியம்மா

    மறுமொழி
  • 12. chollukireen  |  5:12 பிப இல் மே 30, 2017

    அஞ்சு அவருக்கு ஸித்தி,புத்தி என்று இரண்டு மனைவிகள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஸீரியஸாக யோசித்ததில்லை.. நம்மைப்பொருத்த வரையில் அவர் நீ நினைத்தமாதிரி . இப்பொழுது இம்மாதிரியும் புராணங்கள் படிக்கும் போது இம்மாதிரி எல்லாம் தெரியவரும் என்று சொல்லத் தோன்றுகிறது.. இணையத்தில் தக்க படங்களும் கிடைத்தது. பிரம்மாவின் பெண்கள் இல்லையா? பிரம்ம சிருஷ்டிக்குக் கேட்கவா வேண்டும். அழகான தேவதைகள் மாதிரி இருக்கிரார்கள். அழகு பின்னூட்டம். நன்றி பெண்ணே. அன்புடன்

    மறுமொழி
  • 13. கோமதி அரசு  |  6:09 முப இல் ஜூன் 10, 2017

    அருமையான கதை.
    கேள்வி படாத கதை.
    நன்றாக இருக்கிறது வட நாட்டில் கார்த்திகைபாலன் தான் முதல் குழந்தை. என்று கேள்வி பட்டு இருக்கிறேன்..

    மறுமொழி
  • 14. chollukireen  |  10:54 முப இல் ஜூன் 11, 2017

    புராணக்கதை என்று படித்ததால் எழுதினேன். இப்படி ஒவ்வொரு புராணக்கதைகளிலும் மாறுபட்ட கதைகள் இருக்கிறது. உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 15. ஜெயந்தி ரமணி  |  5:46 பிப இல் ஜூன் 13, 2017

    அட! மாம்பழக் கதை போல் இதுவும் அருமை.

    சித்தி, புத்தி விநாயகர் என்று தெரியும். ஆனால் இந்தக் கதை இப்பொழுதுதான் படித்தேன்.

    அதுசரி காமாட்சி அம்மா

    ஏன் உருளை பனீர் கோப்தாவை அங்கு பதிந்து விட்டீர்கள்.

    மறுமொழி
    • 16. chollukireen  |  12:04 பிப இல் ஜூன் 14, 2017

      படித்தபோது நன்றாக இருந்ததால்தான் பதிவு செய்தேன். ஆறுமாத காலமாக மூன்று சக்கர ஸைக்கிளோடுதான் வீட்டுவரை நடைகூட. இப்போது வீட்டுவரை நானே நடக்கிறேன். என்னுடைய காமாட்சி பதிவும் அப்படியே இருந்தது. அதுவும் நடைபயிலட்டும் என்றுதான் பதிவை அவ்விடம் போட்டேன். இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு..முடிகிறதோ முடியவில்லையோ பதிவுகளிடும் ஆசை முடிவுபெறவில்லை. உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
      • 17. ஜெயந்தி ரமணி  |  5:12 பிப இல் ஜூன் 15, 2017

        அடடா! உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் காமாட்சி அம்மா. நான் கூட நீங்கள் சென்னை வந்தால் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தயவு செய்து எனக்கு கண்டிப்பாக சொல்லுங்கள்.

        விரைவில் உடல் தேறி நீங்கள் நடக்க பகவானை பிரார்த்திக்கிறேன்.

        உங்கள் பதிவு போடும் ஆர்வத்துக்கு HATS OFF.

        அங்கும் (காமாட்சி) வருகிறேன் அம்மா

  • 18. chollukireen  |  4:31 பிப இல் ஜூன் 18, 2017

    நன்றி ஜெயந்தி ரமணி. அன்புடன்

    மறுமொழி
  • 19. chollukireen  |  11:56 முப இல் செப்ரெம்பர் 3, 2021

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    வினாயகசதுர்த்தி வருகிறது. அவரைப்பற்றிய கதையாக இருப்பதால் இதை மீள் பதிவு செய்கிறேன். திரும்பவும்தான் ஒருமுறை படியுங்களேன். அன்புடன்

    மறுமொழி
  • 20. ஸ்ரீராம்  |  1:38 பிப இல் செப்ரெம்பர் 3, 2021

    கல்யாணமாய் மாறிய மாம்பழம்!  ஊருக்கு ஊர் மாறிவிடும் பின்னணி!  சுவாரஸ்யம்தான் அம்மா.

    மறுமொழி
  • 22. Geetha Sambasivam  |  1:20 முப இல் செப்ரெம்பர் 4, 2021

    வடக்கே இந்தக் கதையைச் சொல்லிக் கேட்டிருக்கேன். விநாயக சதுர்த்திக்கு நல்லதொரு நினைவூட்டல். எத்தனை தரம் வேண்டுமானாலும் படிக்கலாம்.

    மறுமொழி
    • 23. chollukireen  |  12:04 பிப இல் செப்ரெம்பர் 4, 2021

      நன்றியும் ஸந்தோஷமும். அன்புடன்

      மறுமொழி
  • 24. thulasithillaiakathu  |  1:53 முப இல் செப்ரெம்பர் 10, 2021

    அம்மா இப்படி மாம்பழக்கதைதான் கேட்டிருக்கிறேன். இது புதியதாக இருக்கிறது. ஊருக்கு ஊர் கதைகள் மாறுபடுகிறது. எதுவாக இருந்தாலும் இதில் கூறப்படும் பின் கருத்து தான் முக்கியம்.

    ஒரு குடும்பத்துள் நடக்கும் நிகழ்வுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ரகசியம் கூடாது என்பது. குறிப்பாகப் பெற்றோர் பிள்ளைகளுக்குள்.

    நல்ல கருத்து

    கீதா

    மறுமொழி
    • 25. chollukireen  |  11:56 முப இல் செப்ரெம்பர் 10, 2021

      நன்றி. கருத்துள்ள கதை என்று கூறியதற்கு.மிக்க நன்றி.அன்புடன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


மே 2017
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,500 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: