காவிரி இல்லையிது.

ஓகஸ்ட் 4, 2018 at 8:16 முப 20 பின்னூட்டங்கள்

பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு படம் இது. நதிக்கரையில் வசித்த மக்களெல்லாம், திரும்ப வர ஆரம்பித்து உள்ளனர். யமுனையில் அதிக அளவு தண்ணீரே பார்க்க முடிந்ததில்லை. ஐந்து,ஆறு வருஷங்களுக்குப் பிறகு, தொடர் மழையும்,யமுனையில் வெள்ளமும் என்று சொல்லக் கேட்டேன்.
பாருங்கள் யமுனையை!!

மக்களெல்லாம் ஒருபுறம் திரும்ப ஆரம்பித்த பிறகோ முன்போ வளர்ப்புச் செல்லங்களின் நிலையும் எப்படி இருந்திருக்கும்?
நான் எதையும் நேரில் பார்க்கவில்லை. நீங்களும் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம். நமக்கு உதவுவது செய்தித் தாள்கள்.

மதில்மேல்ப் பூனயாக என்று சொல்வார்களே? நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். என்னை வளர்த்தவர்கள் வந்து விடுவார்கள். வீட்டுப் பக்கம்தான் இது.

நன்றியுள்ள நாங்களும் திரும்புகிறோம். எங்கள் எஜமானர்களும் வந்திடுவார்கள். எங்கள் வீடுதான் அருகில் இருப்பது. நான் இன்னும் குழந்தை,குட்டிங்களுக்கு இடம் தேடணும். புரிதுங்களா?


நானும் எவ்வளவு தண்ணியிலே வரேன் தெரியுமா? தண்ணியெல்லாம் வடிஞ்சுடுங்கோ!என்னிடம் பேசுவது போன்ற ஒரு கற்பனை. அவ்வளவு தான்.

Entry filed under: செய்திகள். Tags: .

மஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA வாழ்த்துகள்

20 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Venkatraman gurumurthy  |  11:29 முப இல் ஓகஸ்ட் 4, 2018

    Thank you very muchfor revealing mystate of mind.

    மறுமொழி
    • 2. chollukireen  |  5:32 முப இல் ஓகஸ்ட் 6, 2018

      ஆமாம் படங்களைப் பார்த்தவுடன் தோன்றியதிது. வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 3. திண்டுக்கல் தனபாலன்  |  1:35 பிப இல் ஓகஸ்ட் 4, 2018

    கஷ்டமாக இருக்கிறது…

    மறுமொழி
    • 4. chollukireen  |  5:29 முப இல் ஓகஸ்ட் 6, 2018

      நல்லபடி திரும்பியவைகள்தான் இவர்கள். இருப்பினும் பார்க்கப் பரிதாபம்தான். அன்புடன்

      மறுமொழி
  • 5. நெல்லைத்தமிழன்  |  1:51 பிப இல் ஓகஸ்ட் 4, 2018

    ஆஹா… செய்தித்தாள்களில் வந்த படங்களா? கொஞ்சம் பயமுறுத்தும் வெள்ளம்தான்.

    நான் 2008ல் பார்த்தபோது (அலஹாபாத்), யமுனை நதி கொஞ்சம் கருமையா குறைவான தண்ணீருடன், ஓரளவு பளபளப்பான கங்கை நதியில் கலப்பதைப் பார்த்தேன். யமுனை நதியில்தான் கழிவுகளையெல்லாம் சேர்த்துவிடுகிறார்களாம்.

    ‘யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே
    கண்ணன் போவதெங்கே’

    பாடல் நினைவுக்கு வருகிறது.

    மறுமொழி
    • 6. chollukireen  |  5:41 முப இல் ஓகஸ்ட் 6, 2018

      நான் 1970 இல் சங்கமத்தில் ஸ்நானம் செய்திருக்கிறேன். அங்கு பார்த்த யமுனைக்கும்,தில்லி யமுனைக்கும் பெரும் வித்தியாஸம்தான். இங்கு யமுனையில் வெள்ளம் வரும்போதுதான் அது நதி.
      மற்றபடி எங்கோ ஒரு ஓரத்தில் ஓடிக்கொணடிருக்கும் தண்ணீர்தான் யமுனை. மயூர்விஹார் பிரிட்ஜை கடக்கும்போது இதுதான் பார்வையில்படும். எதோ ஒரு நாலுவரிஎழுதணும்,படங்கள் அம்மாதிரி மனதில் எண்ணத்தைத் தோற்றுவித்தது. நல்ல பாடல் நினைவுக்கு வந்தது உங்களுக்கு. மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 7. கோமதி அரசு  |  2:46 பிப இல் ஓகஸ்ட் 4, 2018

    மனிதர்கள் கஷ்டபடும் போது அவர்களை அண்டி வாழும் ஜீவராசிகளும் கஷ்டபடுகிறது.

    பூனை, நாயைப் பார்க்கும் போது மனம் வேதனைபடுகிறது.

    மறுமொழி
    • 8. chollukireen  |  5:44 முப இல் ஓகஸ்ட் 6, 2018

      ஸகோதரி நான் வராவிட்டாலும், நீங்கள் வந்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. நீங்கள் எழுதுவது வாஸ்தவம். நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 9. Venkatraman gurumurthy  |  4:37 பிப இல் ஓகஸ்ட் 4, 2018

    Thank youvery much for revealingmy state of mind.

    மறுமொழி
    • 10. chollukireen  |  7:25 முப இல் ஓகஸ்ட் 6, 2018

      நன்றி. மனதில் தோன்றியதை எழுதினேன். அவ்வளவுதான். அன்புடன்

      மறுமொழி
  • 11. ranjani135  |  4:45 பிப இல் ஓகஸ்ட் 4, 2018

    பாவம் வீட்டு விலங்குகள். மனிதர்களே படாத பாடு படும்போது இவைகளை யார் கவனிக்கப் போகிறார்கள்?

    எல்லா ஆறுகளும் இப்போது வெள்ள அபாயத்தில். நீரை சேமித்து வைக்கப் போகிறார்களா இல்லை கடலில் கலக்க விடப் போகிறார்களா?

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்ப்பதில் சந்தோஷம்.

    மறுமொழி
    • 12. chollukireen  |  11:45 முப இல் ஓகஸ்ட் 6, 2018

      நடுவில் உங்களுக்கு மறுமொழி எழுத விட்டுப் போயுள்ளது. யாருக்கு நீங்கள் சொன்னதில் விசாரமிருக்கப் போகிறது. . நினைத்தால் முடிக்கும் காரியமுமில்லை.. வரவிற்கு மிகவும் நன்றி.

      மறுமொழி
  • 13. ஸ்ரீராம்  |  11:22 முப இல் ஓகஸ்ட் 5, 2018

    யமுனை வெள்ளம் பற்றி செய்தித்தாளில் படித்தேன். செல்லங்களின் படங்கள் அழகாய் இருக்கின்றன. அந்தக் குட்டிப்பூனை எங்கள் செல்லம் போலவே இருக்கிறது! குட்டி போடும் நிலையில் உள்ள நாய்ச்செல்லம் பாவம்… சாதாரணமாகவே இடம் கிடைப்பது கஷ்டம்…

    மறுமொழி
    • 14. chollukireen  |  7:30 முப இல் ஓகஸ்ட் 6, 2018

      நானும் பேப்பரில் படிக்கும்போது மனதில் தோன்றியதை எழுதினேன். அவைகளும் அப்படித்தான் நினைத்திருக்கும். எல்லாமே அழகான செல்லங்கள்தான். வளர்ப்பவர்கள் நன்றாகவே வளர்த்திருப்பார்கள். ஸரியாகி இருக்கும் இப்போது. அன்புடன்

      மறுமொழி
  • 15. ஸ்ரீராம்  |  11:22 முப இல் ஓகஸ்ட் 5, 2018

    சென்னை வெள்ளத்தின்போது நாய், ஆடு, கோழி போன்றவற்றை அவைகளை வளர்த்தவர்கள் தலையில் மேல், தோளின்மேல் தூக்கிக் கொண்டு நண்டாந்த படங்களை செய்தித்தாள்கள் பகிர்ந்திருந்தன.

    மறுமொழி
    • 16. chollukireen  |  7:34 முப இல் ஓகஸ்ட் 6, 2018

      கவர்மென்ட் அமைத்த சிறு கூடாரங்கள் மனிதர்கள் தங்கினார்கள். எந்தச் சூழ்நிலையோ? நிலைமை சீர் அடைந்திருக்கும். நன்றி . அன்புடன்

      மறுமொழி
  • 17. chollukireen  |  5:26 முப இல் ஓகஸ்ட் 6, 2018

    மிக்க நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 18. Aekaanthan  |  10:54 முப இல் ஓகஸ்ட் 8, 2018

    யமுனையில் வெள்ள அபாயம் எனப் படித்தேன். ஜூலையில் மழையே அரிது. மழையும் வந்து வெள்ளமுமா -அதுவும் டெல்லியில். ஜூலை 10-ஆம் தேதிதான் டெல்லியிலிருந்து பெங்களூர் திரும்பினேன். மூன்றுவாரத்திற்குள் இப்படிக் கேள்விப்பட்டதில் ஆச்சரியம்.

    வளர்ப்புப்பிராணிகளின் கதி இம்மாதிரி இயற்கைசீற்றங்களில் அதோ கதிதான். ஏழைகள் தாங்கள் ஓடித் தப்பினாலே போதும் எனத்தானே நினைப்பார்கள். யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.. என்று பாடியிருக்குமோ என்னவோ ஒவ்வொரு பூனையும், நாயும்.

    நீங்கள் பாம்பேயில் இருந்ததாகச் சொன்னீர்கள். டெல்லிக்கு எப்போது திரும்பினீர்கள்?

    மறுமொழி
    • 19. chollukireen  |  10:45 முப இல் ஓகஸ்ட் 9, 2018

      ஜூலை மாதக்கடைசியில் இவ்விடம் வந்தேன். வந்தபோது மழையும்,செய்திகளும்.. நாளைக்கு ,பிள்ளைகள் காட்மாண்டுபோய் பசுபதிதரிசனம்,அபிஷேகம் செய்வதாகப் ப்ளான் போட்டுள்ளனர். எப்படியாவது எனக்கும் தரிசனம் செய்துவைப்பதாக அழைத்து வந்திருக்கின்றனர். 26 வருஷ தரிசனம் கொடுத்தவர் பசுபதி. அருளவேண்டும்.. நீங்கள் இவ்வளவு அக்கரையாக விசாரித்திருப்பது மகிழ்ச்சி. டில்லி வாஸம் தற்காலீகமானதுதான். உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 20. Aekaanthan  |  1:21 பிப இல் ஓகஸ்ட் 9, 2018

    காத்மண்டுப் பயணம் கலகலவென அமையட்டும்.
    இறைவனது தரிசனம் இனிதே கிடைக்கட்டும்.

    மறுமொழி

chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஓகஸ்ட் 2018
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,464 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: