தொட்டில் 11
திசெம்பர் 1, 2020 at 3:20 முப 6 பின்னூட்டங்கள்
இந்தப் பதினோராவதுப் பதிவு தொட்டில் வேறு விதமாக ஆரம்பமாகிறது. நீங்கள் அல்லவா இதைச் சொல்ல வேண்டும். அனுபவித்துப் படியுங்கள். அன்புடன்
பொழுது புலர ஆரம்பித்து விட்டது. இப்பொழுதே போனால் நிதானமாக குளித்து விட்டு, ஆரஅமர துணிகளைப் புழிந்து கொண்டு கரையிலுள்ள மாமரப் பிஞ்சுகள் உதிர்ந்துள்ளதைப் பொறுக்கிக் கொண்டு நிதானமாகக் கதைபேசிக்கொண்டு வரலாம்.முதல்நாள் இரவே யார் யார் வருகிரார்கள் என்று கேட்டுக் கொண்டாயிற்று.
குளத்தில் இறங்கி அமிழ்ந்து உட்கார்ந்து விட்டால் கரை ஏறவே மனம் வராது.
புருஷர்களுக்கு ஒரு பக்கம். பெண்களுக்கு ஒரு பக்கம் படிக்கட்டுகள். புருஷாள் வருவதற்கு முன்னால்ப்போனால் யோசனை இல்லாமல் குளிக்கலாம். இரங்கி விட்டால் முதலில்
துருதுருவென்றுமீன் குஞ்சுகள் காலை கிசுகிசு மூட்டுவதுபோல நெளிந்து,நெளிந்து தொட்டுவிட்டுத் தண்ணீரில் மறையும். கல் படிக்கட்டுகளில் துணியைத் துவைத்துக் கசக்கிக் கசக்கி தண்ணீரில் இரண்டு முறை அலசி விட்டால் பளிச்சென்று எந்தப் புடவை,வேஷ்டி துணிகளானாலும் புதுத்துணியை முதல் முறை தண்ணீரில் நினைத்தது போலத் தோன்றும். ஸோப்பாவது,மண்ணாவது எதுவும் அவர்களுக்குத் தெரியாது.
தனி நபரானாலும் அக்கம்,பக்கம் உள்ள உறவினர்கள்,வயதானவர்களின் துணிகளையும் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து துவைத்துக் கொண்டு கொடுப்பது வழக்கம்.
ஓர்ப்படி குளத்துக்குப் போறேன். புடவை இருந்தா குடு. நான் கிளம்பிவிட்டேன். நீ வரியா? நான் போயிண்டே இருக்கேன். மீனா, பட்டு எல்லாரும் வந்துட்டா.
நீங்க போயிண்டே இருங்க. ஒரு எட்டுலே உங்களைப் பிடிச்சூடுவேன். கரையில் விபூதி ஸம்படம்,குங்குமச் சிமிழ் மரத்தில்,தேய்த்துக் குளிக்க நல்லதாக குண்டு மஞ்சள்.
யராவது ஒத்தர் எடுத்துண்டா போதும்.
அவரவர்கள் முடிந்த அளவு துணியுடன் பேசிக்கொண்டே குளத்தை அடைவார்கள்.
படமுதவி—-கூகல்…
View original post 401 more words
Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
thulasithillaiakathu | 4:20 முப இல் திசெம்பர் 2, 2020
துருதுருவென்றுமீன் குஞ்சுகள் காலை கிசுகிசு மூட்டுவதுபோல நெளிந்து,நெளிந்து தொட்டுவிட்டுத் தண்ணீரில் மறையும். //
ஆமாம் அம்மா. நிறைய என் ஊர் நினைவுகள். சின்ன வயசு நினைவுகள். ஆற்றிலும், குளத்திலும் குளிப்பது இப்படித்தான் துணிகளைத் தோளில் போட்டுக் கொண்டு செல்வது எல்லாம் நினைவுக்கு வந்தது.
கீதா
2.
chollukireen | 11:43 முப இல் திசெம்பர் 2, 2020
எல்லா ஊரிலும் முறை ஒன்றாகவே இருக்கிறது. மலரும் உன் நினைவுகளும் இல்லையா? அன்புடன்
3.
thulasithillaiakathu | 5:03 முப இல் திசெம்பர் 2, 2020
துருதுருவென்றுமீன் குஞ்சுகள் காலை கிசுகிசு மூட்டுவதுபோல நெளிந்து,நெளிந்து தொட்டுவிட்டுத் தண்ணீரில் மறையும். //
ஆமாம் அம்மா. நிறைய என் ஊர் நினைவுகள். சின்ன வயசு நினைவுகள். ஆற்றிலும், குளத்திலும் குளிப்பது இப்படித்தான் துணிகளைத் தோளில் போட்டுக் கொண்டு செல்வது எல்லாம் நினைவுக்கு வந்தது.
கீதாலும் குளிப்பது இப்படித்தான் துணிகளைத் தோளில் போட்டுக் கொண்டு செல்வது எல்லாம் நினைவுக்கு வந்தது.
கீதா
4.
chollukireen | 11:45 முப இல் திசெம்பர் 2, 2020
மிகக நன்றி. ஈரத்துணி மிகவும் பாரம்தான். இப்போது அப்படித் தோன்றுகிறது. அன்புடன்
5.
நெல்லைத்தமிழன் | 7:19 முப இல் திசெம்பர் 5, 2020
//அக்கம்,பக்கம் உள்ள உறவினர்கள்,வயதானவர்களின் துணிகளையும் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து துவைத்துக் கொண்டு கொடுப்பது வழக்கம்.//
படிக்கவே, எப்படிப்பட்ட காலத்தை நாம இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. கிராமங்களில் இருந்தபோது அவ்வளவு அந்நியோந்யம். அதெல்லாம் ஒரு காலம்.
நாங்க குளிக்கப் போவதென்றாலும் வயதொத்தவர்களையும் கூப்பிடுவோம், ஆற்றுக் குளியலுக்கு
6.
chollukireen | 11:04 முப இல் திசெம்பர் 6, 2020
நானும் சின்ன வயதில் பார்த்தவைகள்தான் இது. நல்லது,கெட்டது எல்லாவற்றிற்கும் குளக்கரை ஸம்பந்தமிருந்தது. ஆதலால் அதனுடன் நீக்கமற இணைந்திருந்தோம். எல்லாமே மாற்றம் அடைந்து கிராமங்களிலும் இந்த வாழ்க்கை மறந்து விட்டது. குளிக்கப்போனாலும் தோழமை வேண்டியிருந்த காலம்.
அது ஒரு கனாக்காலமாக நினைவு வருகிறது. அன்புடன்