அன்னையர் தினத் தொடர்வு 5
பிப்ரவரி 15, 2021 at 11:02 முப பின்னூட்டமொன்றை இடுக
குழந்தைகளைப் பெரியவர்கள் ஆக்குவதற்கு முன் அவர்களுடன், எந்தவிதமாக எல்லாம் பாடுபடவேண்டி இருக்கிரதுஅவர்களுக்கு உடம்பு அஸௌகரியம் ஏற்பட்டால் எந்த முறையில் வைத்திய வசதி இருந்தது? இதுவும் உங்களுக்குத் தெரியவே எழுதுகிறேன். படியுங்கள். அன்புடன்
வீட்டில் முதல்ப்பெண்ணின் கல்யாணத்திற்குப்
பிறகுஇரண்டு பெண் குழந்தைகள், பேத்தி ஆக பெண் மகவுகள்.
ஆண் குழந்தை அருமைக்கு ஒன்று. நல்ல படிப்பு,சுறுசுறுப்பு.
வயது பதிமூன்று. வம்சத்துக்கே ஒரு ஆண் மகவு.
அப்பாவின் உடன் பிறந்தவர்கள், யாருக்கும், எந்த வாரிசும்
இல்லை. போற்றி போற்றி வளரும் ஆண் குழந்தை.
அந்த நாட்களில் எது ஒன்றானாலும், உடனே டாக்டர் என்று
ஓடாதகாலம்.வீட்டுவைத்தியத்திலேயே,கஞ்சி,கஷாயம்,என்று
வியாதிகள் குணமாகிவிடும்.
இப்படித்தான்8வயதுஇரண்டாவதுபெண்ணிற்குஜலதோஷம்,
மூக்கடைப்பு இருமல்,தும்மல், சளி.
சுக்கு,சித்தரத்தை, இருமலுக்கு அதிமதுரம், எல்லாம்
போட்டுகஷாயம், நாலுநாளில் ஸரியாரது,திரும்பவும் வரது.
மூச்சு விட கஷ்டம்.
டாக்டர் வீட்டுக்கே வந்து பார்க்கிறேன் என்று சொன்னார்.
அவர் ஒரு படிக்கும் பையனின் தகப்பனார்.
ஏற்கெனவே வீட்டுக்காரர் வீட்டிற்கும் வந்திருந்து
பரிச்சய,மானவர்.
டாக்டர் வந்து பார்த்து விட்டு மார்புலே சளி ரொம்ப
கட்டிண்டிருக்கு. மருந்துகள் கொடுப்பதோடு,மார்பு
சளியைக் குறைக்க ஒரு மருந்து கொடுப்பதாகச்சொல்லி
எழுதிக் கொடுத்திருக்கிரார்.
பேரே யாருக்கும் சொல்ல வரவில்லை. ஏதோ, மருந்தைப்
போட்டு ,கட்டு கட்டணுமாம்.
கடைசியிலே சொல்ல வந்த பேரு ஆண்டிப்ளாஸ்த்திரி.
இப்போதெல்லாம், ரைஸ் குக்கர்வருகிரதே அம்மாதிரி
நல்ல அலுமுனியத்தில் ஒரு அழகான டப்பா.
அதில் கெட்டியானவெண்ணெய்போன்றசற்றுஇளமஞ்சளில்
அடைத்திருக்கும் மருந்துக்கலவை. அதனுடைய
வாஸனை.
எப்படி உபயோகிப்பது எல்லாம் செய்து காட்ட ஒரு ஆள்.
எல்லாம் ஸரிதான்.
அகலமான பாத்திரத்தில் ஜலத்தைக் கொதிக்க
வைக்கணும். கொதிக்கும் ஜலத்தில் டப்பியைத் திறந்து
வைத்து சூடாக்கணும்.
அப்போவெல்லாம் பேப்பர் ஒழுங்கா கட் பண்ணி நோட்புக்
தைக்க மெல்லிசா கட்டையிலே …
View original post 381 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed